under review

108 சிவ தாண்டவ விளக்கம்-லீனம்

From Tamil Wiki
லீனம் ( உரங்கையொடுக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - லீனம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று லீனம். தமிழில் இது 'உரங்கையொடுக்கம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஆறாவது கரணம்.

சிவனின் ஆடல்

கழுத்தையும், தலையையும் முன்பக்கம் நீட்டி தோள்பட்டையோடு பதாக ஹஸ்தத்தை மார்பின் நேரே பிடிப்பதே லீனம்.

உசாத்துணை


✅Finalised Page