under review

108 சிவ தாண்டவ விளக்கம்-லலாடதிலகம்

From Tamil Wiki
லலாடதிலகம் (பொட்டிடுகை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - லலாடதிலகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று லலாடதிலகம். தமிழில் இது 'பொட்டிடுகை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது காலை விருச்சிக பாதம் போல நெற்றிக்கு நேரே தூக்கி இடது கையால் பிடித்துக் கொண்டு நெற்றியில் பொட்டு வைப்பது லலாடதிலகம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page