under review

108 சிவ தாண்டவ விளக்கம்-மயூர லலிதம்

From Tamil Wiki
மயூர லலிதம் (மயில் நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - மயூர லலிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, மயூர லலிதம். தமிழில் இது 'மயில் நடம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

விருச்சிக பாதம் அமைத்து கைகளை ரேசிதமாக வைத்து பிரமரியாகவும், சுழன்றும் மயில் போல ஆடுவது மயூர லலிதம்.

உசாத்துணை


✅Finalised Page