under review

108 சிவ தாண்டவ விளக்கம்-பிரஸர்ப்பிதகம்

From Tamil Wiki
பிரஸர்ப்பிதகம் ( ஊர்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - பிரஸர்ப்பிதகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, பிரஸர்ப்பிதகம். தமிழில் இது 'ஊர்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

ஹம்ஸபட்சமாகவும், லதா ஹஸ்தமாகிய நிருத்த ஹஸ்தமாகவும் கைகளை அமைத்து வளைந்த கைக்கு எதிராகவுள்ள காலால் மெதுவாக பூமியைத் தட்டிக்கொண்டு நடந்து வருவது பிரஸர்ப்பிதகம்.

உசாத்துணை


✅Finalised Page