under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தண்டபாதம்

From Tamil Wiki
தண்டபாதம் (ஓங்கு கால் )

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தண்டபாதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, தண்டபாதம். தமிழில் இது 'ஓங்கு கால்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி இரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது காலைப் பின்பக்கமாகத் தூக்கி, இடது காலைத் தரையில் நுனிக்காலால் தட்டி நின்று, சிலம்பு ஒலிக்க, இடது கையை உயர்த்தி வலது கையைத் தொங்கவிட்டு நின்று ஆடுவது தண்டபாதம்.

உசாத்துணை


✅Finalised Page