under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தண்டபட்சம்

From Tamil Wiki
தண்டபட்சம் (கோல்நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தண்டபட்சம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தண்டபட்சம். தமிழில் இது 'கோல்நடம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது முழந்தாளை மார்புக்கு நேராக உயர்த்தி, இடது முழந்தாளைத் தாழ்த்தி, கொடிபோலக் கைகளை இருமருங்கும் துவளவிட்டு ஆடுவது 'தண்டபட்சம்' என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page