under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஜநிதம்

From Tamil Wiki
ஜநிதம் (தோற்றம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஜநிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஜநிதம். தமிழில் இது 'தோற்றம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

காலை இருமருங்கும் வளைய வைத்து, வலது கையை முஷ்டி ஹஸ்தமாக மார்புக்கு நேரே பிடித்து, இடது கையை லதா ஹஸ்தமாகத் தொங்க விட்டு ஆடுவது ஜநிதம்.

உசாத்துணை


✅Finalised Page