under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கடீஸமம்

From Tamil Wiki
கடீஸமம் (அரைநேர்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கடீஸமம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கடீஸமம். தமிழில் இது 'அரைநேர்பு' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தொன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

ஸ்வஸ்திக நிலையிலிருந்து, பிரிந்த பாதத்துடன் கைகளை உந்திக்கு நேராக இடுப்பில் வைத்து பக்க நோக்காகச் சாய்ந்து நின்று ஆடுவது கடீஸமம் என அழைக்கப்படும்.

உசாத்துணை


✅Finalised Page