under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஊருத்விருத்தம்

From Tamil Wiki
ஊருத்விருத்தம் (குறங்காட்சி)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஊருத்விருத்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஊருத்விருத்தம். தமிழில் இது 'குறங்காட்சி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கையை சிறிது திருப்பித் தொடையில் வைத்துக் கொண்டு முழங்காலை வளைத்துத் தூக்கி ஆடுவது ஊருத்விருத்தம்.

உசாத்துணை


✅Finalised Page