under review

108 சிவ தாண்டவ விளக்கம்-உந்மத்தகம்

From Tamil Wiki
உந்மத்தகம் (பித்தர் நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - உந்மத்தகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று உந்மத்தகம். தமிழில் இது 'பித்தர் நடம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களைத் வளைத்து, கைகளையும் நன்றாக நீட்டி, மணிக்கட்டிலிருந்து முன்கையைத் தொங்க விட்டு ஆடுவது, உந்மத்தகம் என்று அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page