under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஆஷிப்தரேசிதம்

From Tamil Wiki
ஆஷிப்தரேசிதம் (அதிரவீசும் கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஆஷிப்தரேசிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஆஷிப்தரேசிதம். தமிழில் இது 'அதிரவீசும் கை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபதாவது கரணம்.

சிவனின் ஆடல்

இடது கையை மடக்கி மார்புக்கு நேராக வைத்து, வலது கையை ரேசித ஹஸ்தமாகத் தொங்க விட்டு, முழங்கால்களை மடக்கி நின்று ஆடுவதே ஆஷிப்தரேசிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page