under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஆக்ஷிப்தம்

From Tamil Wiki
ஆக்ஷிப்தம் (வீசுகால்கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஆக்ஷிப்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஆக்ஷிப்தம். தமிழில் இது 'வீசுகால்கை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

ஆக்ஷிப்தச்சாரியாகப் பக்கவாட்டில், சிறிது சாய்ந்த கைகளால், சதுரமான கடகாமுகக் கையுடன் நின்று ஆடுவது. அதாவது வேகமாய் கையும் காலும் வீசி நின்று ஆடுவது ஆக்ஷிப்தம்

உசாத்துணை


✅Finalised Page