under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அர்த்தநிருத்தகம்

From Tamil Wiki
அர்த்தநிருத்தகம் (சாய் தட்டுத்தாள்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்த நிருத்தகம்.

108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்தநிருத்தகம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்த நிருத்தகம். தமிழில் இது சாய் தட்டுத்தாள் என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

கைகளைச் சிரத்தின் மேல் வைத்து, கைகளை விரலுக்கு விரல் நேராகக் குவித்து, பாதி வளைய இருப்பதே அர்த்தநிருத்தகம் என அழைக்கபடுகிறது.

உசாத்துணை


✅Finalised Page