under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அபக்ராந்தம்

From Tamil Wiki
அபக்ராந்தம் (திரிகுறங்கு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அபக்ராந்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, அபக்ராந்தம். தமிழில் இது 'திரிகுறங்கு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி ஒன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

தொடைகளை வளைத்து, வளைத்த காலைத் தூக்கிப் பக்கங்களில் வளைய வைத்து, பிரயோகத்திற்குத் தக்கவாறு கைகளை அமைத்து ஆடுவது அபக்ராந்தம்.

உசாத்துணை


✅Finalised Page