under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அஞ்சிதம்

From Tamil Wiki
அஞ்சிதம் (மருட்கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

அஞ்சிதம்- சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அஞ்சிதம். தமிழில் இது 'மருட்கை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை மாறி வைத்து வலது உள்ளங்கால் வெளியில் தெரியும்படி வைத்து இடது கையைச் சூசியாக மூக்கின் நுனியை நோக்கி நீட்டி வலது கையைக் குறுக்காக இடதுபக்கம் நீட்டி ஆடுவது அஞ்சிதம் என அழைக்கப்படும்.

உசாத்துணை


✅Finalised Page