under review

வயவன்

From Tamil Wiki

வயவன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். மருதவளம் நிறைந்த புனல்வாயிலென்னும் ஊரையடுத்த இருப்பையூர் என்ற சீறூரை ஆண்டான்.

வாழ்க்கைக்குறிப்பு

வயவன் இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். பரணர் இவனைப்பாடினார். இவனைப் பற்றிய செய்திகள் நற்றிணையின் 260-ஆவது பாடலாக அமைந்துள்ளது. இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை

“...முனையெழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல்
வயவன் மலிபுனல் வாயில் இருப்பை”

என்ற பாடல் வழியாக அறியலாம்.

உசாத்துணை


✅Finalised Page