யோன் தானியேல்
From Tamil Wiki
யோன் தானியேல் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
யோன் தானியேல் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுவில்லில் யோன் சங்கரப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பேராற்றிலுள்ள புல்தானையில் வைத்தியராகப் பணியாற்றினார். யோன் தானியேல் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
யோன் தானியேல் இலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் நடை பெற்றுவந்த ஆங்கிலத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். 'கந்த புராண மறைபொருள்', 'Garden of Eden'என்னும் நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- கந்த புராண மறைபொருள்
- Garden of Eden
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:தானியேல் யோன், சங்கரப்பிள்ளை யோன்: noolaham
✅Finalised Page