under review

யோன் சங்கரப்பிள்ளை

From Tamil Wiki

யோன் சங்கரப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர். 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்ற நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

யோன் சங்கரப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாணிப்பாய் என்னும் ஊரில் உடுவிலிலே பிறந்தார். இவரின் மகன் டாக்டர் யோன் தானியேல் வட இந்தியாவில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

யோன் சங்கரப்பிள்ளை 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்னும் நூலை எழுதினார். இவரின் மகன் டாக்டர் யோன் தானியேல் இவருடைய வரலாற்று ஆராய்ச்சியுடன் தொடர்புடைய நவீன ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார்.

நூல் பட்டியல்

  • யாழ்ப்பாணச் சரித்திரம்

உசாத்துணை


✅Finalised Page