மெய்க்கீர்த்திமாலை
From Tamil Wiki
மெய்க்கீர்த்திமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். சொற்சீரடி எனப்படும் கட்டுரைச் செய்யுள்களால் மரபுவழியாக வரும் தலைவனின் புகழை விரிவாகக் கூறுதல் மெய்க்கீர்த்திமாலை
சொற்சீர் அடியான் தொழில்படு கீர்த்தியைப்
பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை. -
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 865
யாழ்ப்பாணம் முத்துராசர் எழுதிய, யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறும் கைலாயமாலை காப்பு நீங்கலாக 310 இரண்டுவரிக் கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற இரு சிற்றிலக்கிய வகைகளின் பாடுபொருள், யாப்பு இவற்றின் கலவையாக அமைந்தது.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page