மும்மணிமாலை
From Tamil Wiki
மும்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மும்மணிமாலையில் வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் வரிசையில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும்
மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,
கலித்துறை, ஆசிரியம்
- நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36
- நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபடும்.
சில மும்மணிமாலை நூல்கள்
- திருப்போரூர் கந்தப்ப பிள்ளை மும்மணிமாலை
- நசரேய மும்மணிமாலை(ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை)
உசாத்துணை
- கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.
வெளி இணைப்புகள்
✅Finalised Page