மணிமாலை
- மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மணி (பெயர் பட்டியல்)
மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவர இயற்றப்படுவது மணிமாலை.
தொன்னூல் விளக்கம்[1], முத்துவீரியம்[2], பிரபந்த தீபம்[3], பிரபந்த தீபிகை[4] ஆகிய பாட்டியல் நூல்கள் மணிமாலையை ஓர் சிற்றிலக்கிய வகையாக் குறித்துள்ளன.
இதர இணைப்புகள்
உசாத்துணை
- html print of section P16a of TIPA (with name anchors as targets for index)
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- மணிமாலை - இலக்கணம்
அடிக்குறிப்புகள்
- ↑
மணிமாலை வெண்பா வகைநா லைந்துடன்
இணையாய்க் கலித்துறை இரட்டைப் பாடலே- தொன்நூல் விளக்கம் - 279
- ↑
எப்பொருண் மேலும் வெண்பா இருபதும்
கலித்துறை நாற்பதும் கலந்து வருவது
மணிமாலை யாகும் வழுத்துங் காலே- முத்துவீரியம் - 1056
- ↑
மணிமாலை தானே மன்னும் எப்பொருளினும்
வெண்பா இருபான் கலித்துறை நாற்பான்
விரவிப்பாட விதித்தனர் புலவர்- பிரபந்ததீபம் - 30
- ↑
சொல்லுமெப் பொருளின் மேலும்
தூய வெண் பாவிரு பஃதுநாற் பதுகலித்
துறை விரவின் மணிமாலையாம்.- பிரபந்த தீபிகை - 12
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2023, 16:41:38 IST