பராயனார்
பராயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பராயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
பராயனார் பாடிய பாடல் நற்றிணையில் 155-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. முன்பு தன்னுடன் கூடிய தலைவியின் தனித்திருக்கும் நிலையை கண்டு தலைவன் பேசுதலும் தலைவி தன் ஏற்புநிலையை குறிப்பால் உணர்த்துவதும் தலைவனது கூற்றாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காதல் கொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து விளையாடுவதில்லை. நெய்தல் பூக்கும் விரிந்த இதழ் கொண்ட தொடலை மலர்களை சூடுவதில்லை. விரிந்த மணற்பரப்பின் மேல் அமைந்த பூமரத்தின் கீழ் தனித்து நிற்பர்.
- குறையாத பேரழகுடைய அவர்கள் பெருங்கடலின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அணங்குகளை போல காட்சியளிப்பர். கழிமுகத்து அலைகளால் சலனமுறாது நிற்கும் மரங்களை போல இருப்பர்.
- உவமை: புன்னகையில் தெரியும் தலைவியின் பற்கள் மீன் முள்ளின் வெண்ணிறத்தை ஒத்துள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 155
- திணை: நெய்தல்
- துறை: இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- நற்றிணை - 155:Tamilsurangam
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:20:33 IST