under review

சுப்பிரமணிய தேசிகர்

From Tamil Wiki

சுப்பிரமணிய தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், உரையாசிரியர்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய தேசிகர் தண்டியாசிரியர் இயற்றிய அலங்காரத்துக்கு உரை செய்தார். 'இந்திரவிமானமாலை' எனும் ஒரு நூலை எழுதினார். அது இந்திரன் சுப்பிரமணியருக்குக் கொடுத்த விமானத்தின் மேல் பாடப்பட்டது.

விவாதம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருவர் சுப்பிரமணியதேசிகர் எனும் பெயரில் பண்டாரசந்நிதிகளாக இருந்தனர். உ.வே. சாமிநாதையர் தண்டியலங்காரவுரையாசிரியர் இன்னார் என்பது விளங்கவில்லை என்பதால் இவ்விருவரில் யாரும் தண்டியலங்கார உரையாசிரியர் அல்லர் எனலாம். கந்தசுவாமியம் எனும் நிகண்டு நூலை இயற்றிய கீழ்வேளூர் சுப்பிரமணியதேசிகர் என்பவரும் இப்பெயரில் அறியப்படுகிறார்.

நூல் பட்டியல்

  • தண்டியலங்கார உரை
  • இந்திரவிமானமாலை

உசாத்துணை


✅Finalised Page