சிங்காரவேலர் விருது
From Tamil Wiki
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் சிங்காரவேலர் விருதும் ஒன்று. இவ்விருது 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிங்காரவேலர் விருது
தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களில், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலிருந்து சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
சிங்காரவேலர் விருது பெற்றவர்கள் - (2021 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2018 | பா. வீரமணி |
2 | 2019 | அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன் |
3 | 2020 | ஆ.அழகேசன் |
4 | 2021 | மதுக்கூர் ராமலிங்கம் |
உசாத்துணை
✅Finalised Page