சாந்துப்புலவர்
From Tamil Wiki
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கை வரலாறு
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
சாந்துப்புலவர் 1778-ல் மயூரகிரிக்கோவை நூலை இயற்றி அரங்கேற்றினார்.
மறைவு
சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
நூல்கள்
- மயூரகிரிக்கோவை
உசாத்துணை
✅Finalised Page