under review

முத்துமுருகப் புலவர்

From Tamil Wiki

முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் 'மிழலைச் சதகம்', 'திவாகரம் பொருள் விளக்கம்', 'உலாமாலை' என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

நூல் பட்டியல்

  • மிழலைச் சதகம்
  • திவாகரம் பொருள் விளக்கம்
  • உலாமாலை

உசாத்துணை


✅Finalised Page