வயவன்
From Tamil Wiki
Revision as of 10:53, 11 November 2023 by Tamizhkalai (talk | contribs)
வயவன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். மருதவளம் நிறைந்த புனல்வாயிலென்னும் ஊரையடுத்த இருப்பையூர் என்ற சீறூரை ஆண்டான்.
வாழ்க்கைக்குறிப்பு
வயவன் இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். பரணர் இவனைப்பாடினார். இவனைப் பற்றிய செய்திகள் நற்றிணையின் 260-ஆவது பாடலாக அமைந்துள்ளது. இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை
“...முனையெழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல்
வயவன் மலிபுனல் வாயில் இருப்பை”
என்ற பாடல் வழியாக அறியலாம்.
உசாத்துணை
✅Finalised Page