under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2011

From Tamil Wiki
Revision as of 07:24, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-2011

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2011

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
பிப்ரவரி ஜமீன் பாண்டி டீக்கடை போடி மாலன் செம்மலர்
பிப்ரவரி அக்னி தமிழ்நிலவன் தினமணி கதிர்
மார்ச் நோக்கிப் பாய்தல் ம. காமுத்துரை ஆனந்த விகடன்
மே கோடி பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடன்
ஜூன் பொன்னகரம் அம்மாளுக்கு ஓ போடுங்க... எழில்முதல்வன் இளந்தமிழன்
ஜூலை குழந்தையின் விருப்பம்... சுபமி அமுதசுரபி
ஆகஸ்ட் தெக்குப் புஞ்சை பாஸ்கர் சக்தி ஆனந்த விகடன்
அக்டோபர் களரிக் கிழவி சி.வ.சு. ஜெகஜோதி தினமணி கதிர்
நவம்பர் ஓட்டு பொன்னீலன் ஓம்சக்தி தீபாவளி மலர்
நவம்பர் சிறியவர்களும்... பெரியவர்களும்! இமையம் ஆனந்த விகடன் தீபாவளி மலர்
நவம்பர் பாட்டியின் பெட்டி ஶ்ரீஜா வெங்கடேஷ் கலைமகள் தீபாவளி மலர்
நவம்பர் தாலிக் கடன் கணராம்புத்திரன் செம்மலர்

2011-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2011-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய ‘கோடி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அ. வெண்ணிலா இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


✅Finalised Page