Tamil Encyclopedia
முதன்மையாக நவீனத் தமிழிலக்கியம் சார்ந்த நூல்கள், ஆசிரியர்கள், அமைப்புகள் குறித்த பிழையற்ற தகவல்களைத் தொகுப்பதற்கான முன்னெடுப்பு. தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு குறித்த தகவல்களும் இதில் இடம்பெறுகின்றன.
அர்ப்பணிப்புள்ள இலக்கிய அறிஞர்கள், வாசகர்களால் தொகுக்கப்படும் இந்தத் தகவல்கள் மூத்த படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆய்வாளர்கள் அடங்கிய ஆசிரியர்குழுவால் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனை குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றன.
ஆசிரியர் குழு
|
முதன்மை ஆசிரியர்: அ.கா. பெருமாள்
அ.கா. பெருமாள் தமிழின் முதன்மையான நாட்டாரியல் ஆய்வாளர் & இலக்கிய வரலாற்றாசிரியர். இக்கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்தையும் செயல்பாட்டையும் ஆற்றுப்படுத்துகிறார் (மேலும்...)
|
ஆசிரியர்கள் - கல்வித்துறை
பேராசிரியர் சி. மௌனகுரு
நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர் & நடிகர். இலங்கையில் தமிழ்க்கலைகளுக்கும் சிங்களக்கலைகளுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து நிறுவியவர் (மேலும்...)
பேராசிரியர் மா. சுப்பிரமணியம்
நாகர்கோயில் இந்துக்கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்தார். முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். நாட்டாரியல் ஆய்வுகளில் பங்கெடுத்துள்ளார். (மேலும்...)
முனைவர் ப. சரவணன்
தமிழாசிரியர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். (மேலும்...)
|
ஆசிரியர்கள் - படைப்புத்துறை
நாஞ்சில் நாடன்
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளி. நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். 2010-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர் (மேலும்...)
சோ. தர்மன்
நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். (மேலும்...)
சுனில் கிருஷ்ணன்
எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி. இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமியால் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். (மேலும்...)
ஜெயமோகன்
தமிழ் எழுத்தாளர் & விமர்சகர். நாவல்கள, சிறுகதைகள், விமர்சனங்கள் தவிர பண்பாடு, சூழியல், காந்தியம், தத்துவம் என்று விரிந்த தளத்தில் இயங்குகிறார். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் இவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது (மேலும்...)
சுசித்ரா
சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் செய்த மொழியாக்கங்கள் விருதுகள் பெற்றுள்ளன. (மேலும்...)
|
|
ஒருங்கிணைப்பாளர்கள்
|
சைதன்யா
சந்தோஷ் சரவணன், பூமி என்ற தொண்டு நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றுகிறார். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்
மதுசூதனன் சம்பத், சென்னை. வணிக நிர்வாகம் - செயற்கை நுண்ணறிவுத்துறைகளில் பணியாற்றுகிறார்
|
|