ஷங்கர்ராமசுப்ரமணியன்: Difference between revisions
Line 4: | Line 4: | ||
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1975-ல் திருநெல்வேலியில் பிறந்தார். இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) பட்டயப்படிப்பு முடித்தார். | ஷங்கர்ராமசுப்ரமணியன் 1975-ல் திருநெல்வேலியில் பிறந்தார். இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) பட்டயப்படிப்பு முடித்தார். | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 'தி இந்து' 'தமிழ்திசை' நாளிதழ், 'அருஞ்சொல்' இணையப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். | ஷங்கர்ராமசுப்ரமணியன் 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 'தி இந்து' 'தமிழ்திசை' நாளிதழ், '[[அருஞ்சொல்]]' இணையப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
2001-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் கவிதைத் தொகுப்பான ’மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ வெளியானது. இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம் போன்ற தளங்களில் எழுதிவருகிறார். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. | 2001-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் கவிதைத் தொகுப்பான ’மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ வெளியானது. இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம் போன்ற தளங்களில் எழுதிவருகிறார். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. |
Revision as of 22:14, 16 August 2023
ஷங்கர்ராமசுப்ரமணியன் (பிறப்பு: 1975) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர்.
வாழ்க்கைக்குறிப்பு
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1975-ல் திருநெல்வேலியில் பிறந்தார். இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) பட்டயப்படிப்பு முடித்தார்.
இதழியல்
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 'தி இந்து' 'தமிழ்திசை' நாளிதழ், 'அருஞ்சொல்' இணையப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
2001-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் கவிதைத் தொகுப்பான ’மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ வெளியானது. இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம் போன்ற தளங்களில் எழுதிவருகிறார். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.
'படைத்தவன்' மற்றும்'எனது வளர்ப்பு மீன்கள்' என்ற கட்டுரைத்தொகுப்பை எழுதினார். 'யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு', 'அருவம் உருவம்: நகுலன் 100' ஆகியவை அவரது பிற நூல்கள்.
இலக்கிய இடம்
"புன்னகைக்குப்பின் அடியில் மெல்ல கசப்பை விட்டுச்செல்லும் அழகிய சித்தரிப்புகள்" என ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியத்தின் கவிதைகளை மதிப்பிடுகிறார். "சுயமற்றிருப்பதை அரூபமாக மட்டுமில்லாமல் பௌதீகமாகவும் ஷங்கர் சாதித்திருக்கிறார். ஷங்கருடைய கவிதைகளில் உடலும் காமமும் இடம்பெற்றிருக்கும்போது அங்குப் புலன் உணர்ச்சி என்பதே இல்லை. உடல் உறுப்புகள் பற்றி எழுதும்போதுக்கூட அவை பௌதீகமாக உருவம் பெறுவதில்லை." என விஷால்ராஜா மதிப்பிடுகிறார்.
விருதுகள்
- 2017-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் விருது வழங்கியது.
நூல் பட்டியல்
கட்டுரை
- படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்
- யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு
- அருவம் உருவம்: நகுலன் 100
கவிதைத் தொகுப்பு
- மிதக்கும் இருக்கைகளின் நகரம் (2001)
- ஆயிரம் சந்தோஷ இலைகள்
- நிழல், அம்மா
- கல் முதலை ஆமைகள்
- பிறக்கும்தோறும் கவிதை
- ஞாபக சீதா
- ராணியென்று தன்னையறியாத ராணி
- காகங்கள் வந்த வெயில்
- சிங்கத்துக்கு பல் துலக்குபவன்
- இகவடை பரவடை (2023)
இணைப்புகள்
- ஷங்கர்ராமசுப்ரமணியன்: வலைதளம்
- ’கல், முதலை, ஆமைகள்’: எஸ். ராமகிருஷ்ணன்
- தூல சூட்சும சந்நிதி: arunchol: ஷங்கர்ராமசுப்ரமணியன்
- கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
- நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்
- பலூன் கோடாரி -விஷால் ராஜா
- இந்த பிருஷ்டம், இந்த பூமியில் இருப்பது ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது: ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் உரையாடல், யூட்யூப் காணொளி
✅Finalised Page