being created

ரா. செந்தில்குமார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 53: Line 53:
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]
* [http://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]
* [http://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]
{{being created}}

Revision as of 06:05, 25 January 2022

WORK IN PROGRESS

ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார்

ரா. செந்தில்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைக்களங்களிலும் பண்பாட்டு பின்புலங்களிலும் ஏற்படும் உராய்வுகளை கதையாக்குகிறார். தமிழகத்தை கதைக்களமாக கொண்ட கதைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில் சென்ற காலத்து நிலப்பிரபுத்துவ ஆளுமைகளின் வீழ்ச்சியை பதிவு செய்கின்றன.

பிறப்பு, கல்வி

செந்தில்குமார் ஜூலை 23, 1976 அன்று அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்-ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், சென்னை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.

தனி வாழ்க்கை

2004ல் காயத்ரியை மணந்தார். கவின் (14) என்று ஒரு மகனும் காவியா என்று ஒரு மகளும் உள்ளனர். தற்போது ஜப்பானில் மென்பொருள் நிறுவனராக பணியாற்றி வருகிறார்.

கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபட்டார், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டார். பின்தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவிகள் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

இசூமியின் நறுமணம்
இசூமியின் நறுமணம்

சிறிய வயதில் இவரது முதல் படைப்பாக கோகுலம் இதழில் சிறுகதை வெளியானது.

பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.   தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு மேற்கொண்டார்.   தமிழக இலக்கியவாதிகளான எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து பல்வேறு இலக்கிய கூட்டங்களை நடத்தினார்.

தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக "ஜெயமோகன், தி. ஜானகிராமன், வண்ணதாசன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி மற்றும் லியோ டால்ஸ்டாயை" குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம், மதிப்பீடு

நூல்கள்

நூல் பட்டியல்: இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)

சிறுகதைகள்
  • மடத்து வீடு சிறுகதை (2016) - பதாகை இணைய இதழ்
  • சர்வம் சௌந்தர்யம்
  • சிபுயா கிராஸிங்க்
  • மலரினும் மெல்லிது
  • இசூமியின் நறுமணம்
  • செர்ரி ஃப்ளாசம்
  • இந்திர தேசம்
  • அனுபவ பாத்தியம்
  • பெட்டகம்
  • நிவிக்குட்டியின் டெடிபேர்
கட்டுரைகள்
  • தி.ஜா என்னும் சௌந்தர்ய உபாசகர்
  • மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.