under review

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(11 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்க காலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன.  
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்க காலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
மதுரைமாநகரில் ஓலைக்கடை என்பது ஒரு பகுதியாக விளங்கியது. அப்பகுதியில் வாழ்ந்ததால் இவருக்கு மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் என்னும் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  
மதுரையில் ஓலைக்கடை என்னும் பகுதியில் வாழ்ந்ததால் இவருக்கு மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் என்னும் பெயர் வழங்கியிருக்கலாம்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் பாடிய இரு பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூலில் இடம் பெற்றுள்ளன. அவை [[நற்றிணை]] நூலில் 250 மற்றும் 369- வது பாடல்களாக உள்ளன. இரண்டு பாடல்களும் அகத்துறை சார்ந்ததாகும்.  
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் பாடிய இரு பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூலான [[நற்றிணை]]யில் உள்ளன. இரண்டும் அகப்பாடல்கள்.  
== பாடல் சொல்லும் செய்திகள் ==
== பாடல் சொல்லும் செய்திகள் ==
===== நற்றிணை 250 =====
* மாலையில் முல்லை மலர்ந்து மணம் வீசும். குருகுகள் தங்கள் இருப்பிடம் தேடிச் செல்லும்
* [[மருதத் திணை]]
* தன் மகன்  கிண்கிணி(கால்சலங்கை) ஒலிக்க தேர்கள் ஓடும்  தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வாயில் பூமணம் கமழ்ந்தது. நெஞ்சில் பூசியிருந்த சந்தனம் கலைந்திருந்தது. அவனைக் கண்ட தந்தை (தலைவன்)  மகனை அள்ளி அணைக்கச் சென்றபோது ஊடியிருந்த காதலி(மனைவி) 'யாரையா நீர்' என்று சொல்லித் தடுத்தாள். இந்தச் செய்தியைத் தலைவன் தன் பாணனிடம் சொல்லித் தலைவியுடன் வாழ வகைசெய்யுமாறு வேண்டுகிறான்(நற்றிணை 250)
* புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.
* ஞெமை மரம் ஓங்கி நிற்கும் இமய மலையின் உச்சியிலிருந்து வானத்து அருவி இறங்கிக் கங்கை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்தக் கங்கையான்றுப் புனல்நீர் போல என் காமம் என் நிறைவுடைமையை அடித்துக்கொண்டு ஓடுகிறது. அந்தக் காமக் கங்கையில் நீந்திக் கரையேறுவது எப்படி என்று தலைவி வருந்துகிறாள்.
* பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி ஒலிக்க தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை  எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகியது.  
 
* சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் உள்ளம் அவனைச்  செலுத்த  காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றான்.
* அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி  பிணைமான் போல வெருண்டு அவனை நீங்கி விலகி நின்றாள்.  
* என்னருகில் வந்ததற்கான நோக்கமென்ன என்று அவனை இகழ்ச்சியுடன் நோக்கி அவள் கேட்டாள்.
===== நற்றிணை 369 =====
* [[நெய்தல் திணை]]
* பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது
* சூரியன் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அந்திமக் குன்றைச் சென்றடைய, நிறைந்த சிளகுகளையுடைய நாரைக் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் சென்றன
* பகற் பொழுது மெல்ல மெல்லச் செல்ல முல்லையரும்பு வாய்திறந்து மலர்ந்து நிற்கும் கொடிய மாலைப் பொழுதானது நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருகிறது
* பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியில் வானிடத்தினின்று இறங்கும்  அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை கரை கடந்து வழியாது நின்ற அணையை உடைத்துச் செல்லும் பலம்கொண்ட நீர் வெள்ளம் போன்ற  எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்தத் தெரியவில்லையே. எவ்வாறு பிழைப்பேன்?
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
===== நற்றிணை 250 =====
===== நற்றிணை 250 =====
<poem>
[[மருதத் திணை]]
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.<poem>
நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
Line 33: Line 25:
</poem>
</poem>
===== நற்றிணை 369 =====
===== நற்றிணை 369 =====
*[[நெய்தல் திணை]]
* பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது
<poem>
<poem>
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
Line 48: Line 42:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்  
மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்  
[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/index.html நற்றிணை, தமிழ் சுரங்கம்]
[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/index.html நற்றிணை, தமிழ் சுரங்கம்]
{{Finalised}}
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}

Latest revision as of 10:13, 4 November 2023

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் ஓலைக்கடை என்னும் பகுதியில் வாழ்ந்ததால் இவருக்கு மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் என்னும் பெயர் வழங்கியிருக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் பாடிய இரு பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூலான நற்றிணையில் உள்ளன. இரண்டும் அகப்பாடல்கள்.

பாடல் சொல்லும் செய்திகள்

  • மாலையில் முல்லை மலர்ந்து மணம் வீசும். குருகுகள் தங்கள் இருப்பிடம் தேடிச் செல்லும்
  • தன் மகன் கிண்கிணி(கால்சலங்கை) ஒலிக்க தேர்கள் ஓடும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வாயில் பூமணம் கமழ்ந்தது. நெஞ்சில் பூசியிருந்த சந்தனம் கலைந்திருந்தது. அவனைக் கண்ட தந்தை (தலைவன்) மகனை அள்ளி அணைக்கச் சென்றபோது ஊடியிருந்த காதலி(மனைவி) 'யாரையா நீர்' என்று சொல்லித் தடுத்தாள். இந்தச் செய்தியைத் தலைவன் தன் பாணனிடம் சொல்லித் தலைவியுடன் வாழ வகைசெய்யுமாறு வேண்டுகிறான்(நற்றிணை 250)
  • ஞெமை மரம் ஓங்கி நிற்கும் இமய மலையின் உச்சியிலிருந்து வானத்து அருவி இறங்கிக் கங்கை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்தக் கங்கையான்றுப் புனல்நீர் போல என் காமம் என் நிறைவுடைமையை அடித்துக்கொண்டு ஓடுகிறது. அந்தக் காமக் கங்கையில் நீந்திக் கரையேறுவது எப்படி என்று தலைவி வருந்துகிறாள்.

பாடல் நடை

நற்றிணை 250

மருதத் திணை

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.

நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே!

நற்றிணை 369
  • நெய்தல் திணை
  • பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்
அறியேன் வாழி- தோழி!- அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்
நிறை அடு காமம் நீந்துமாறே.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் நற்றிணை, தமிழ் சுரங்கம்


✅Finalised Page