under review

பொன்மணியார்

From Tamil Wiki
Revision as of 16:59, 11 October 2022 by Siva Angammal (talk | contribs)

பொன்மணியார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல்  சங்கத் தொகை நூல்களில் ஒன்றான  குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்மணியார், ஆண் புலவரா அல்லது பெண் புலவரா என்பதை உறுதியாக அறியமுடியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

பொன்மணியார் இயற்றிய ஒரு பாடல்  சங்கத் தொகை நூல்களில் ஒன்றான  குறுந்தொகையில் 391- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 391

முல்லைத் திணைப் பாடல்

தோழி கூற்று

பிரிவிடைப் பருவ வரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.

எருதானது வெறுத்து உழாமல் சோம்பிக்கிடக்கும்படி மான் வெம்மையோடு கிடந்த மழை நீங்கிய முல்லைநிலத்தில் விரைந்து இடிக்கும்

பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது

பெய்த மாமழையைப் பொருந்தி தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி  துன்பத்தைத் தரும் மாலைக் காலம் வந்தது.

மலரையுடைய கொம்பிலிருந்து போழ்ந்தாற் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம் தனித்து வருந்த அமைதியாக நின்றன.

பாடல் நடை

குறுந்தொகை 391


உவரி யொருத்தல் உழாது மடியப்

புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்

கடிதிடி உருமிற் பாம்புபை அவிய

இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே

வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்

கையற வந்த பையுள் மாலைப்

பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை

தாஅம் நீர் நனந்தலை புலம்பக்

கூஉந் தோழி பெரும்பே தையவே.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.