under review

தசாங்கப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />)
 
(2 intermediate revisions by one other user not shown)
Line 3: Line 3:
தசாங்கப்பத்து பத்து அங்கங்களின் வர்ணனையாக அமைவதால் [[பிரபந்தத் திரட்டு]] இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.
தசாங்கப்பத்து பத்து அங்கங்களின் வர்ணனையாக அமைவதால் [[பிரபந்தத் திரட்டு]] இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.


[[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரின்]] [[திருத்தசாங்கம்]] தசாங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட முதல் சிற்றிலக்கியம். சொரூபானந்தர் மீது [[தத்துவராயர்]] 15-ம் நூற்றாண்டில் பாடிய [[தத்துவ போதம்]] என்னும் தசாங்கம்,  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய 'தசாங்க வகுப்பு', நவீன இலக்கியத்தில் [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]]யின் 'பாரத தேவியின் திருத்தசாங்கம்' ஆகியவையும் தச்சங்கப்பத்து என்னும் வகைமியில் இயற்றப்பட்ட சில சிற்றிலக்கியங்கள்.  
[[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரின்]] [[திருத்தசாங்கம்]] தசாங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட முதல் சிற்றிலக்கியம். சொரூபானந்தர் மீது [[தத்துவராயர்]] 15-ம் நூற்றாண்டில் பாடிய [[தத்துவ போதம்]] என்னும் தசாங்கம்,  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய 'தசாங்க வகுப்பு', நவீன இலக்கியத்தில் [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]]யின் 'பாரத தேவியின் திருத்தசாங்கம்' ஆகியவையும் தச்சங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட சில சிற்றிலக்கியங்கள்.
 
அரசர் அல்லது தேவர்க்குரிய பத்து சின்னங்களை(உறுப்புகள்)  நூறு பாடல்களில் பாடுவது [[சின்னப்பூ]].  


==உசாத்துணை==  
==உசாத்துணை==  
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
==இதர இணைப்புகள்==
== அடிக்குறிப்புகள் ==
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[பாட்டியல்]]
*[[சின்னப்பூ]]
==அடிக்குறிப்புகள்==
<references />
<references />



Latest revision as of 06:20, 7 May 2024

தசாங்கப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்ற சொல் பத்து உறுப்புகள் (தசம் -பத்து, அங்கம் -உறுப்பு) எனப் பொருள்படும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து[1].

தசாங்கப்பத்து பத்து அங்கங்களின் வர்ணனையாக அமைவதால் பிரபந்தத் திரட்டு இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.

மாணிக்கவாசகரின் திருத்தசாங்கம் தசாங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட முதல் சிற்றிலக்கியம். சொரூபானந்தர் மீது தத்துவராயர் 15-ம் நூற்றாண்டில் பாடிய தத்துவ போதம் என்னும் தசாங்கம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய 'தசாங்க வகுப்பு', நவீன இலக்கியத்தில் பாரதியின் 'பாரத தேவியின் திருத்தசாங்கம்' ஆகியவையும் தச்சங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட சில சிற்றிலக்கியங்கள்.

அரசர் அல்லது தேவர்க்குரிய பத்து சின்னங்களை(உறுப்புகள்) நூறு பாடல்களில் பாடுவது சின்னப்பூ.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 40


✅Finalised Page