under review

சாண்டில்யன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சாண்டில்யன் (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) வாசகனை ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சாகச நாவல்களை டஹ்மிழ் இலக்கியத்திற்கு தந்தவர். வரலாற்றூச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(57 intermediate revisions by 9 users not shown)
Line 1: Line 1:
சாண்டில்யன் (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) வாசகனை ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சாகச நாவல்களை டஹ்மிழ் இலக்கியத்திற்கு தந்தவர். வரலாற்றூச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய நாவல்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன
{{Read English|Name of target article=Chandilyan|Title of target article=Chandilyan}}
[[File:சாண்டில்யன்.png|thumb|சாண்டில்யன்]]
சாண்டில்யன் (ஆர். பாஷ்யம் ஐயங்கார்) (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) தமிழில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட சாகச நாவல்களை எழுதிய எழுத்தாளர். வால்டர் ஸ்காட்<ref>[[wikipedia:Walter_Scott|Walter Scott - Wikipedia]]</ref>, சார்லஸ் கிங்ஸ்லி<ref>[[wikipedia:Charles_Kingsley|Charles Kingsley - Wikipedia]]</ref> ஆகியோருடைய தாக்கத்துடன் அரண்மனைச் சதிகளும் கடற்பயண விவரணைகளும் கொண்ட நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த இவருடைய நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.
==தனி வாழ்க்கை==
சாண்டில்யன் தமிழ் வைணவப் பின்னணி கொண்டவர். ராமானுஜம் ஐயங்கார் - பூங்கோவில்வல்லி ஆகியோருக்கு மகனாக நவம்பர் 10, 1910 அன்று திருக்கோவிலூரில் பிறந்தார். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். குடும்பத்தினருடைய சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திருஇந்தளூர் என்ற கிராமம்.


==தனிவாழ்க்கை==
நன்னிலம் பண்ணைனல்லூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் சென்னை பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார்.  
ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி ஆகியோருக்கு மகனாக நவம்பர் 10, 1910ம் ஆண்டு திருக்கோவிலூரில் பிறந்தார்.  அவருடைய இயற்பெயர்  பாஷ்யம் அய்யங்கார். சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.


1929-ல் ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் மகள் ரங்கநாயகியை மணம் புரிந்தார். சாண்டில்யனுக்கு இரு மகன்கள் – பேராசிரியர் சடகோபன், பேராசிரியர் கிருஷ்ணன். ஐந்து மகள்கள் – வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி. சடகோபன் பேராசிரியராக இருந்தார். கிருஷ்ணன் வைஷ்ணவா கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார். பத்மா சாண்டில்யன் இசைக்கலைஞர். பாடகர் ஷான் ரோல்டன் சாண்டில்யனின் பேரன். (பத்மாவின் மகன்) சாண்டில்யனின் பெயரையே சுருக்கி ஷான் என முன்னொட்டாகச் சேர்த்திருக்கிறார்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
[[File:004 2R.jpg|thumb|சாண்டில்யன் தொடர்கதை,கோபுலு ஓவியம்]]
[[File:Yavana rani1.jpg|thumb|யவனராணி, லதா ஓவியம்]]
கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930-களில் சென்னை தி. நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] கிருஷ்ணமூர்த்தியும் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]] நடத்திய வார இதழ் [[நவசக்தி]]யில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன். [[திராவிடன்]] இதழில் ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவரால் அது வெளியிடப்பட்டது. அவரது கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆசிரியர் கல்கி ஆனந்த விகடனில் வெளியிட்டார். அதன் பின்னரே திருக்கண்ணபுரம் சீனிவாசாச்சாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ் மொழியைப் பயின்றார். தொடர்ந்து [[சுதேசமித்திரன்]] வார இதழில் சிறுகதைகள் எழுதினார். தன்னுடைய குலக்குழுவான சாண்டில்ய (chandilya) கோத்திரத்தின் பெயரை தன் புனைபெயராக ஆக்கிக் கொண்டார்.


கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
பாலைவனத்துப் புஷ்பம், சாந்ததீபம் இரண்டும் அவரது தொடக்க கால வரலாற்று நாவல்கள். சாண்டில்யன் எழுதி புகழ்பெற்ற முதல் வரலாற்று நாவல் ஜீவபூமி. இது ராஜஸ்தானியப் பின்னணியில் ராஜபுதன வீரர்களின் கதையாக அமைந்தது. அந்நாவலுக்கு முன்னோடியாக அவர் ராஜபுதன வீரர்களைப் பற்றிய சிறுகதைகளையும் [[அமுதசுரபி]] மாத இதழில் எழுதியிருந்தார். ஜீவபூமி அமுதசுரபி இதழில் வெளியாகி புகழ்பெறவே தொடர்ந்து அமுதசுரபி இதழில் எழுதினார். குமுதத்தில் முதலில் எழுதிய தொடர் கன்னிமாடம்.  
====== குமுதம் ======
சாண்டில்யன் தொடர்ச்சியாக [[குமுதம்]] வார இதழில் ஏறத்தாழ முப்பதாண்டுகள் சரித்திர நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் சாண்டில்யன் எழுதிய முதல் நாவல் 1956ல் வெளிவந்த கன்னிமாடம். இரண்டாவது நாவல் [[மன்னன் மகள்]] 1958ல் வெளிவந்தது. சாண்டில்யனின் புகழ்பெற்ற முதல் நாவல் அதுவே .குமுதம் வார இதழின் வெற்றிக்கு மிக இன்றியமையாத கூறாக அவருடைய நாவல்கள் அமைந்தன. சாண்டில்யனின் ஒரு நாவல் முடிந்த அதே இதழிலேயே அடுத்த நாவலை தொடங்கும் வழக்கம் குமுதத்தில் இருந்தது. இவர் எழுதிய மிகப் பெரிய நாவல் [[கடல்புறா]]. மூன்று பாகங்களிலாக ஏறத்தாழ 2,000 பக்கம் கொண்டது. அவருடைய இறுதி நாவல் சீனத்துச் சிங்காரி. அது குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. அவர் அதை முடிப்பதற்குள் உயிர்துறந்தார்.
====== நாட்டுடைமை விவாதம் ======
2009-ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்துவிட்டனர்.
==இதழியல்==
சாண்டில்யன் 1935 முதல் 1945 வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் வழிகாட்டுதலில் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராக பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்ஸில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 1937-ல் மகாத்மா காந்தியை சந்தித்து பேட்டி கண்டு எழுதினார்.  


2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.
தன் கதைகளை வெளியிட 1982-ல் ’[[கமலம்]]’ என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. விரைவிலேயே அதிலிருந்து விலகினார். இதழ் நின்றுவிட்டது.
==திரைப்படத்துறை==
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என். ரெட்டி, நடிகர் சித்தூர் வி. நாகையா ஆகிய இருவருடனும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. நாகி ரெட்டியுடன் விஜயா ஸ்டுடியோ கதை இலாகாவில் பணியாற்றினார். சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார்.
== அமைப்புப் பணிகள் ==
சாண்டில்யன் 1956ல் அமைந்த [[தமிழ் எழுத்தாளர் சங்கம்]] அமைப்பில் கல்கி தலைமையில் பணியாற்றினார்.கல்கிக்குப் பிறகு தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. சாண்டில்யன், [[தேவன்]] இருவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட, தேவன் வெற்றி பெற்றார்


==திரைப்படத்துறை==
1962-ல் எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வரவும், எழுத்தாளர்களுக்குக் கடனுதவி போன்ற பொருளாதார உதவிகள் செய்யவும் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் எனும் அமைப்பை [[விக்ரமன்]] , [[த.நா.குமாரசாமி]] ஆகியோருடன் இணைந்து தொடங்கினார்.அது விரைவிலேயே செயலிழந்தது
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.
 
சாண்டில்யன் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் முயற்சி எடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் வலுப்பெற்றது.
 
தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
== ஆவணப்படம் ==
சாண்டில்யன் Birth Of Newspaper என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டார்.
== மறைவு ==
சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987 அன்று சென்னையில் காலமானார்.
==இலக்கிய இடம்==
[[File:Sandil.jpg|thumb|சாண்டில்யன் நினைவு அறக்கட்டளை துவக்கம். படத்திறப்பு நவம்பர் 06, 2010]]
சாண்டில்யனின் நாவல்கள் அனைத்துமே சாகசத்தன்மை கொண்டவை. இளைஞனாகிய கதைநாயகன் பல்வேறு இடர்கள் வழியாக சென்று வெற்றி பெறுகிறான். கதைமாந்தரின் உருவாக்கத்தில் கற்பனாவாத மிகை உண்டு. பொதுவாகச் சாண்டில்யனின் கதைமாந்தர்களில் எதிர்மறைத் தன்மை கொண்டவர்கள் இல்லை. சரித்திர நாயகர்கள் அனைவரையுமே மாமனிதர்களாகக் காட்டுவது அவருடைய இயல்பு. தமிழில் கல்கி எழுதிய சரித்திரக் கற்பனாவாத நாவல்களுக்குப் பின் மிகப் பெரிய அளவில் வாசகர்களை ஈர்த்தவை சாண்டில்யனின் நாவல்கள். அதற்குக் காரணம் அவர் அக்கால அளவுகோல்களின்படி பாலியலை சற்று கூடுதலாகவே எழுதினார் என்பதுதான். அவர் பாலியலை எழுத சமஸ்கிருத காவியங்களின் அழகியலை பின்பற்றினார்.


==புதினங்கள்==
சாண்டில்யனின் புனைவுகளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய ஆங்கில நாவலாசிரியர்கள் வால்டர் ஸ்காட் மற்றும் சார்ல்ஸ் கிங்ஸ்லி. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ (Ivanhoe, 1819)<ref>[[wikipedia:Ivanhoe|Ivanhoe - Wikipedia]]</ref>, சார்ல்ஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வர்ட் ஹோ (Westward Ho!, 1855)<ref>[[wikipedia:Westward_Ho!_(novel)|Westward Ho! (novel) - Wikipedia]]</ref> ஆகிய நாவல்கள் வெவ்வேறு வகைகளில் அவர் நாவல்களில் ஊடாடுகின்றன. குறிப்பாக கடற்பயணம், கடற்கொள்ளையர்கள் பற்றிய நாவல்களில் சார்ல்ஸ் கிங்ஸ்லியின் தாக்கத்தை காணலாம்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார்.  


==சாண்டில்யனின் கதையுலகம்==
சாண்டில்யனின் புனைவுகளின் சிறப்புகள்:
வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே.
* அவை மிக விரிவான காட்சி விவரணைகள் கொண்டவை. நிலக்காட்சிகள், போர்க்களக் காட்சிகள் ஆகியவற்றை காட்சிகளாக விரித்து எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான்.
அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதியவைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான். இளஞ்செழியன் டைபீரியஸ் உறவு (யவன ராணி) நம் மனத்தை எந்த அளவுக்குக் கொள்ளை கொண்ட ஒன்று! சாண்டில்யன் படைப்புகளில் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகிய மேற்கத்திய சாகசப் படைப்பாளிகளின் பாதிப்பு உண்டு. ஆனாலும், அவற்றின் வரலாற்று ஐதீகப் பின்புலம் அவற்றை நம் மண்ணுடன் பிணைக்கிறது. அவரது கதைகூறல் நம் தொல் மரபு பற்றிய பெருமித உணர்வை உருவாக்கும் தன்மை கொண்டது. நம்முடைய இறந்த காலத்தின் சிறந்த விஷயங்களை அது நமக்குக் காட்டுகிறது. அவரது பெரும்பாலான படைப்புகளில் வில்லன்கள் இல்லை. வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கற்பனையான வீரர்களும் மட்டுமே உள்ளனர். அவை ஒவ்வொன்றும் குறையாத மாண்புடன் மாத்திரமே சித்திரிக்கப்படுகின்றன. கதாபாத்திரங்கள்கூட ஒருவருக்கொருவர் அதே மரியாதையைக் கொண்டுள்ளனர்.
* அவருடைய புனைவுகளில் உள்ள காவிய அழகியல் கூறுகள். அவர் சமஸ்கிருத, தமிழ் பெருங்காவியங்களிலுள்ள காட்சிகளையும் உணர்ச்சிகளையும் தன் நூல்களில் பின்பற்றினார். நேரடியாகவே காவியங்களின் பல நுட்பங்களை அவருடைய நூல்களில் விவரித்தார்.
சாண்டில்யனின் பாணியிலான சாகச எழுத்து இத்தகைய வரைமுறை மீறலுக்குப் பண்பாடு சார்ந்த ஒரு வடிகாலை அமைத்துத் தருகிறது. ஒரு கையில் உருவிய வாளுடனும் மறு கையில் அரை நிர்வாணமான பூவழகியுடனும் கப்பலில் பாய்ந்து ஏறும் இளஞ்செழியனுடன் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். நம்முடைய வன்முறைக்கும் காமத்துக்கும் ஓர் இனிய வெளிப்பாடாக அது அமைகிறது.
* தமிழ் வரலாற்று சாகசப் புனைவுகளை தமிழ் வரலாற்றுச் சூழலுக்கு வெளியே கொண்டு சென்றார். ராஜபுதனப் பின்னணியிலும், மராட்டியப் பின்னணியிலும் நாவல்களை எழுதினார்.
சாகச நாவல், வாசகனை ஒரு கனவுலகத்துக்கு எடுத்துச் செல்வதன் மூலம், வன்முறையையும் காமத்தையும் மரபான அறநெறியுடன் பிணைத்துவிடுகிறது. இளமையின் ஒரு கட்டத்தில் அது அவசியமானதே ஆகும்.
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் சொல்வது: 'தமிழின் வரலாற்றுக் காலகட்டங்களை பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றவை சாண்டில்யனின் நாவல்கள். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான்’.  
==படைப்புகள்==
==படைப்புகள்==
===வரலாற்றுப் புதினங்கள்===
======வரலாற்று நாவல்கள்======
*கடல் புறா
*பாலைவனத்துப் புஷ்பம்
*யவன ராணி
*சாந்ததீபம்
*ராஜ முத்திரை
*ஜீவபூமி
*விஜய மகாதேவி
*கன்னிமாடம்
*[[மன்னன் மகள்]]
*[[கடல்புறா]]
*[[யவனராணி]]
*[[ராஜமுத்திரை]]
*[[ராஜதிலகம்]]
*[[ஜலதீபம்]] (3 பாகங்கள்)
*[[மூங்கில் கோட்டை]]
*விஜயமகாதேவி
*பல்லவ திலகம்
*பல்லவ திலகம்
*விலை ராணி
*விலை ராணி
*மன்னன் மகள்
*ராஜ திலகம்
*ஜல தீபம் (3 பாகங்கள்)
*கன்னி மாடம்
*சேரன் செல்வி
*சேரன் செல்வி
*கவர்ந்த கண்கள்
*கவர்ந்த கண்கள்
*மலை வாசல்
*மலைவாசல்
*ஜீவ பூமி
*மஞ்சள் ஆறு
*மஞ்சள் ஆறு
*மூங்கில் கோட்டை
*சித்தரஞ்சனி
*சித்தரஞ்சனி
*மோகினி வனம்
*மோகினி வனம்
*இந்திர குமாரி
*இந்திரகுமாரி
*இளைய ராணி
*இளைய ராணி
*நீள்விழி
*நீள்விழி
*நாக தீபம்
*நாகதீபம்
*வசந்த காலம்
*வசந்த காலம்
*பாண்டியன் பவனி
*பாண்டியன் பவனி
*நாகதேவி
*நாகதேவி
*நீல வல்லி
*நீலவல்லி
*ராஜ யோகம்
*ராஜயோகம்
*மோகனச் சிலை
*மோகனச்சிலை
*மலை அரசி
*மலை அரசி
*கடல் ராணி
*கடல் ராணி
*ஜலமோகினி
*ஜலமோகினி
*மங்கலதேவி
*மங்கலதேவி
*அவனி சுந்தரி
*அவனிசுந்தரி
*உதய பானு
*உதயபானு
*ராஜ்யஸ்ரீ
*ராஜ்யஸ்ரீ
*ராஜ பேரிகை
*ராஜபேரிகை
*நிலமங்கை
*நிலமங்கை
*சந்திரமதி
*சந்திரமதி
*ராணா ஹமீர்
*ராணா ஹமீர்
*அலை அரசி
*அலை அரசி
*மலை வாசல்
*கடல் வேந்தன்
*கடல் வேந்தன்
*பாலைவனத்துப் புஷ்பம்
*சாந்நதீபம்
*மண்மலர்
*மண்மலர்
*மாதவியின் மனம்
*மாதவியின் மனம்
*பல்லவ பீடம்
*பல்லவபீடம்
*நீலரதி
*நீலரதி
 
======சமூக நாவல்கள்======
 
===சமூகப் புதினங்கள்===
*நங்கூரம்
*நங்கூரம்
*செண்பகத் தோட்டம்
*செண்பகத் தோட்டம்
*மனமோகம்
*மனமோகம்
*மதுமலர்
*மதுமலர்
===அரசியல் புதினம்===
*புரட்சிப் பெண்
*புரட்சிப் பெண்
======சிறுகதைகள்======
* ராணியின் கனவு
====== கட்டுரைகள் ======
* கம்பன் கண்ட பெண்கள்
* போராட்டங்கள் (தன்வரலாறு)
* ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
* சினிமா வளர்ந்த கதை
== உசாத்துணை ==
* நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன்
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/oct/31/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-263270.html தினமணி இணைப்பிதழில் அமுதசுரபி விக்ரமன் கட்டுரை]
* [https://brahminsforsociety.com/tamil/2016/11/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/ சாண்டில்யன் பற்றி..]
* [https://horsethought.blogspot.com/2016/10/blog-post.html சாண்டில்யன் நடத்திய கமலம்! ~ மேய்ச்சல் மைதானம்]
*[https://kanaigal.blogspot.com/2008/12/blog-post.html கணைகள்: யவன ராணி – சாண்டில்யன்]
== அடிக்குறிப்புகள் ==
<references />


===கதைகள்===
{{Finalised}}
ராணியின் கனவு
[[Category:Tamil Content]]
 
[[Category:எழுத்தாளர்கள்]]
==உசாத்துணை==
[[Category:நாவலாசிரியர்கள்]]
நவீன தமிழ் இலக்கைய வரலாறு: ஜெயமோகன்

Latest revision as of 06:23, 7 May 2024

To read the article in English: Chandilyan. ‎

சாண்டில்யன்

சாண்டில்யன் (ஆர். பாஷ்யம் ஐயங்கார்) (நவம்பர் 10, 1910 - செப்டம்பர் 11, 1987) தமிழில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட சாகச நாவல்களை எழுதிய எழுத்தாளர். வால்டர் ஸ்காட்[1], சார்லஸ் கிங்ஸ்லி[2] ஆகியோருடைய தாக்கத்துடன் அரண்மனைச் சதிகளும் கடற்பயண விவரணைகளும் கொண்ட நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த இவருடைய நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.

தனி வாழ்க்கை

சாண்டில்யன் தமிழ் வைணவப் பின்னணி கொண்டவர். ராமானுஜம் ஐயங்கார் - பூங்கோவில்வல்லி ஆகியோருக்கு மகனாக நவம்பர் 10, 1910 அன்று திருக்கோவிலூரில் பிறந்தார். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். குடும்பத்தினருடைய சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திருஇந்தளூர் என்ற கிராமம்.

நன்னிலம் பண்ணைனல்லூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் சென்னை பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார்.

1929-ல் ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் மகள் ரங்கநாயகியை மணம் புரிந்தார். சாண்டில்யனுக்கு இரு மகன்கள் – பேராசிரியர் சடகோபன், பேராசிரியர் கிருஷ்ணன். ஐந்து மகள்கள் – வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி. சடகோபன் பேராசிரியராக இருந்தார். கிருஷ்ணன் வைஷ்ணவா கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார். பத்மா சாண்டில்யன் இசைக்கலைஞர். பாடகர் ஷான் ரோல்டன் சாண்டில்யனின் பேரன். (பத்மாவின் மகன்) சாண்டில்யனின் பெயரையே சுருக்கி ஷான் என முன்னொட்டாகச் சேர்த்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சாண்டில்யன் தொடர்கதை,கோபுலு ஓவியம்
யவனராணி, லதா ஓவியம்

கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930-களில் சென்னை தி. நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன். திராவிடன் இதழில் ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவரால் அது வெளியிடப்பட்டது. அவரது கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆசிரியர் கல்கி ஆனந்த விகடனில் வெளியிட்டார். அதன் பின்னரே திருக்கண்ணபுரம் சீனிவாசாச்சாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ் மொழியைப் பயின்றார். தொடர்ந்து சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். தன்னுடைய குலக்குழுவான சாண்டில்ய (chandilya) கோத்திரத்தின் பெயரை தன் புனைபெயராக ஆக்கிக் கொண்டார்.

பாலைவனத்துப் புஷ்பம், சாந்ததீபம் இரண்டும் அவரது தொடக்க கால வரலாற்று நாவல்கள். சாண்டில்யன் எழுதி புகழ்பெற்ற முதல் வரலாற்று நாவல் ஜீவபூமி. இது ராஜஸ்தானியப் பின்னணியில் ராஜபுதன வீரர்களின் கதையாக அமைந்தது. அந்நாவலுக்கு முன்னோடியாக அவர் ராஜபுதன வீரர்களைப் பற்றிய சிறுகதைகளையும் அமுதசுரபி மாத இதழில் எழுதியிருந்தார். ஜீவபூமி அமுதசுரபி இதழில் வெளியாகி புகழ்பெறவே தொடர்ந்து அமுதசுரபி இதழில் எழுதினார். குமுதத்தில் முதலில் எழுதிய தொடர் கன்னிமாடம்.

குமுதம்

சாண்டில்யன் தொடர்ச்சியாக குமுதம் வார இதழில் ஏறத்தாழ முப்பதாண்டுகள் சரித்திர நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் சாண்டில்யன் எழுதிய முதல் நாவல் 1956ல் வெளிவந்த கன்னிமாடம். இரண்டாவது நாவல் மன்னன் மகள் 1958ல் வெளிவந்தது. சாண்டில்யனின் புகழ்பெற்ற முதல் நாவல் அதுவே .குமுதம் வார இதழின் வெற்றிக்கு மிக இன்றியமையாத கூறாக அவருடைய நாவல்கள் அமைந்தன. சாண்டில்யனின் ஒரு நாவல் முடிந்த அதே இதழிலேயே அடுத்த நாவலை தொடங்கும் வழக்கம் குமுதத்தில் இருந்தது. இவர் எழுதிய மிகப் பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்களிலாக ஏறத்தாழ 2,000 பக்கம் கொண்டது. அவருடைய இறுதி நாவல் சீனத்துச் சிங்காரி. அது குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. அவர் அதை முடிப்பதற்குள் உயிர்துறந்தார்.

நாட்டுடைமை விவாதம்

2009-ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்துவிட்டனர்.

இதழியல்

சாண்டில்யன் 1935 முதல் 1945 வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் வழிகாட்டுதலில் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராக பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்ஸில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 1937-ல் மகாத்மா காந்தியை சந்தித்து பேட்டி கண்டு எழுதினார்.

தன் கதைகளை வெளியிட 1982-ல் ’கமலம்’ என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. விரைவிலேயே அதிலிருந்து விலகினார். இதழ் நின்றுவிட்டது.

திரைப்படத்துறை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என். ரெட்டி, நடிகர் சித்தூர் வி. நாகையா ஆகிய இருவருடனும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. நாகி ரெட்டியுடன் விஜயா ஸ்டுடியோ கதை இலாகாவில் பணியாற்றினார். சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார்.

அமைப்புப் பணிகள்

சாண்டில்யன் 1956ல் அமைந்த தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைப்பில் கல்கி தலைமையில் பணியாற்றினார்.கல்கிக்குப் பிறகு தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. சாண்டில்யன், தேவன் இருவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட, தேவன் வெற்றி பெற்றார்

1962-ல் எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வரவும், எழுத்தாளர்களுக்குக் கடனுதவி போன்ற பொருளாதார உதவிகள் செய்யவும் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் எனும் அமைப்பை விக்ரமன் , த.நா.குமாரசாமி ஆகியோருடன் இணைந்து தொடங்கினார்.அது விரைவிலேயே செயலிழந்தது

சாண்டில்யன் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் முயற்சி எடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் வலுப்பெற்றது.

தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.

ஆவணப்படம்

சாண்டில்யன் Birth Of Newspaper என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டார்.

மறைவு

சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987 அன்று சென்னையில் காலமானார்.

இலக்கிய இடம்

சாண்டில்யன் நினைவு அறக்கட்டளை துவக்கம். படத்திறப்பு நவம்பர் 06, 2010

சாண்டில்யனின் நாவல்கள் அனைத்துமே சாகசத்தன்மை கொண்டவை. இளைஞனாகிய கதைநாயகன் பல்வேறு இடர்கள் வழியாக சென்று வெற்றி பெறுகிறான். கதைமாந்தரின் உருவாக்கத்தில் கற்பனாவாத மிகை உண்டு. பொதுவாகச் சாண்டில்யனின் கதைமாந்தர்களில் எதிர்மறைத் தன்மை கொண்டவர்கள் இல்லை. சரித்திர நாயகர்கள் அனைவரையுமே மாமனிதர்களாகக் காட்டுவது அவருடைய இயல்பு. தமிழில் கல்கி எழுதிய சரித்திரக் கற்பனாவாத நாவல்களுக்குப் பின் மிகப் பெரிய அளவில் வாசகர்களை ஈர்த்தவை சாண்டில்யனின் நாவல்கள். அதற்குக் காரணம் அவர் அக்கால அளவுகோல்களின்படி பாலியலை சற்று கூடுதலாகவே எழுதினார் என்பதுதான். அவர் பாலியலை எழுத சமஸ்கிருத காவியங்களின் அழகியலை பின்பற்றினார்.

சாண்டில்யனின் புனைவுகளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய ஆங்கில நாவலாசிரியர்கள் வால்டர் ஸ்காட் மற்றும் சார்ல்ஸ் கிங்ஸ்லி. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ (Ivanhoe, 1819)[3], சார்ல்ஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வர்ட் ஹோ (Westward Ho!, 1855)[4] ஆகிய நாவல்கள் வெவ்வேறு வகைகளில் அவர் நாவல்களில் ஊடாடுகின்றன. குறிப்பாக கடற்பயணம், கடற்கொள்ளையர்கள் பற்றிய நாவல்களில் சார்ல்ஸ் கிங்ஸ்லியின் தாக்கத்தை காணலாம்.

சாண்டில்யனின் புனைவுகளின் சிறப்புகள்:

  • அவை மிக விரிவான காட்சி விவரணைகள் கொண்டவை. நிலக்காட்சிகள், போர்க்களக் காட்சிகள் ஆகியவற்றை காட்சிகளாக விரித்து எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான்.
  • அவருடைய புனைவுகளில் உள்ள காவிய அழகியல் கூறுகள். அவர் சமஸ்கிருத, தமிழ் பெருங்காவியங்களிலுள்ள காட்சிகளையும் உணர்ச்சிகளையும் தன் நூல்களில் பின்பற்றினார். நேரடியாகவே காவியங்களின் பல நுட்பங்களை அவருடைய நூல்களில் விவரித்தார்.
  • தமிழ் வரலாற்று சாகசப் புனைவுகளை தமிழ் வரலாற்றுச் சூழலுக்கு வெளியே கொண்டு சென்றார். ராஜபுதனப் பின்னணியிலும், மராட்டியப் பின்னணியிலும் நாவல்களை எழுதினார்.

எழுத்தாளர் ஜெயமோகன் 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் சொல்வது: 'தமிழின் வரலாற்றுக் காலகட்டங்களை பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றவை சாண்டில்யனின் நாவல்கள். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான்’.

படைப்புகள்

வரலாற்று நாவல்கள்
  • பாலைவனத்துப் புஷ்பம்
  • சாந்ததீபம்
  • ஜீவபூமி
  • கன்னிமாடம்
  • மன்னன் மகள்
  • கடல்புறா
  • யவனராணி
  • ராஜமுத்திரை
  • ராஜதிலகம்
  • ஜலதீபம் (3 பாகங்கள்)
  • மூங்கில் கோட்டை
  • விஜயமகாதேவி
  • பல்லவ திலகம்
  • விலை ராணி
  • சேரன் செல்வி
  • கவர்ந்த கண்கள்
  • மலைவாசல்
  • மஞ்சள் ஆறு
  • சித்தரஞ்சனி
  • மோகினி வனம்
  • இந்திரகுமாரி
  • இளைய ராணி
  • நீள்விழி
  • நாகதீபம்
  • வசந்த காலம்
  • பாண்டியன் பவனி
  • நாகதேவி
  • நீலவல்லி
  • ராஜயோகம்
  • மோகனச்சிலை
  • மலை அரசி
  • கடல் ராணி
  • ஜலமோகினி
  • மங்கலதேவி
  • அவனிசுந்தரி
  • உதயபானு
  • ராஜ்யஸ்ரீ
  • ராஜபேரிகை
  • நிலமங்கை
  • சந்திரமதி
  • ராணா ஹமீர்
  • அலை அரசி
  • கடல் வேந்தன்
  • மண்மலர்
  • மாதவியின் மனம்
  • பல்லவபீடம்
  • நீலரதி
சமூக நாவல்கள்
  • நங்கூரம்
  • செண்பகத் தோட்டம்
  • மனமோகம்
  • மதுமலர்
  • புரட்சிப் பெண்
சிறுகதைகள்
  • ராணியின் கனவு
கட்டுரைகள்
  • கம்பன் கண்ட பெண்கள்
  • போராட்டங்கள் (தன்வரலாறு)
  • ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
  • சினிமா வளர்ந்த கதை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page