under review

சரவணன் சந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
(Initial version)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(34 intermediate revisions by 10 users not shown)
Line 1: Line 1:
{{being created}}
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]]
 
சரவணன் சந்திரன் (பிறப்பு: ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர்.
= சரவணன் சந்திரன் =
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நவீன வாழ்வின் நெருக்கடிகள் பற்றி எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் அஜ்வா, ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார்.   
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கோவில்பட்டியில் 1979 ல் பிறந்த சரவணன் சந்திரன் தன் சிறு வயதை வறுமையோடு கழித்தவர். கல்லூரிப் படிப்பின் போது கல்லூரிகளுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாட்டு வீரராகப் பங்கெடுத்துள்ளார்.


== தனிவாழ்க்கை ==
====== பிறப்பு ======
சரவண சந்திரன் ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஊடகவியலாளர், தொலைக்காட்சி இயக்குனர், மீன்கடை உரிமையாளர், விளையாட்டு வீரர், விவசாயி எனப் பல தளங்களில் இயங்குபவர்.  
சரவணன் சந்திரன் ஜூன் 25, 1979-ல் அவரது தாயின்  சொந்த ஊரான காக்கா தோப்பில் (மதுரை) பிறந்தார். தாத்தா மற்றும் பாட்டியுடன் வளர்ந்தார். தந்தை சந்திரன். தாய் சாந்தி. தங்கை மகாலட்சுமி.


== இலக்கிய வாழ்க்கை ==
====== கல்வி ======
15 ஆண்டுகளுக்கும் மேலாக இதழாளராகப் பணியில் இருந்த சரவணன் சந்திரன் 2015ல் எழுத்தாளராக அறிமுகமானார். முகநூல் குறிப்புகள், பிளாக்கராக இணையத்தில் எழுதியவற்றைத் தொடர்ந்து அச்சு ஊடகத்தை நோக்கிப் பயணித்தவர்களில் கவனத்தை ஈர்த்தவர். தனது அஜ்வா நாவலின் காட்சியொலி முன்னோட்டத்தை சமூக ஊடங்கங்களில் நேரடியாக வெளியிட்டு அதன்மூலம் சமூக ஊடகங்களை அவரது படைப்புகளுக்கான செலவற்ற விளம்பர உத்தியாக பயன்படுத்திக் கொண்டார்.  
சரவணன் தனது ஆரம்பக் கல்வியினை  காக்காத்தோப்பு சூரியநாராயண சாஸ்திரிகள் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். ஒன்றாம் வகுப்பில் தந்தையின் சொந்த ஊரான தேனிக்கு இடம்பெயர்ந்தார். 3-ம் வகுப்பு படிக்கும்போது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டியில் குடியேறியது. கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார்.  


== இலக்கிய இடம், மதிப்பீடு ==
====== விளையாட்டு ======
தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்ட வகையில் ஆர்வமூட்டும் படைப்புகளில் அறிய மானுடத் தருணங்களை உருவாக்கியவர் சரவணன் சந்திரன். எழுத்துக்களின் வழியாக சமகாலத்தைப் பதிவு செய்வதோடு கடந்த காலத்தையும் பழமையின் வேர்களையும் தொட முனையும் வேட்கையே தன் எழுத்தின் குறிக்கோள் என்று கூறுபவர். கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பணசாமி, சோ.தர்மன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.  
பள்ளிக் காலத்தில் சரவணன் சந்திரன் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் அமைந்துள்ள தமிழக அரசு விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது.  


ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்.  
மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார்.  
== தனிவாழ்க்கை ==
சரவணன் சந்திரனின் மனைவி பவித்ரா.  


முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று ஜெயமோகன் இவரது படைப்புகளை  மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  
சரவணன் இதழியலாளராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றினார். தகவல்தொடர்பு (பிபிஓ) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வியாபார நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றை தொடங்கி மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார்.


== படைப்புகள் ==
== ஊடகவியல் ==
சரவணன் சந்திரன் [[ஆறாம்திணை]] இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். காலச்சுவடு பத்திரிகையிலும் குறுகிய காலம் துணையாசிரியராக இருந்தார். பிறகு 'இந்தியா டுடே' இதழில் பணியாற்றினார்.


=== நாவல்கள்  ===
சரவணன் சந்திரன் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். "சொல்வதெல்லாம் உண்மை", ஒரு தாயின் சபதம், கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சிகளின் இயக்குனராக 200 நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியிலும், 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். தொலைக்காட்சிகளில் ஆயிரம் நிகழ்ச்சிகள் வரை இயக்குனராக இருந்து பணியாற்றி இருக்கிறார்.


* அஜ்வா
== இலக்கிய வாழ்க்கை ==
* ரோலக்ஸ் வாட்ச்
சரவணன் சந்திரனின் சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் புத்தகங்களைப் படிப்பதற்கு ஊக்குவித்தனர். கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற இலக்கிய அமைப்பில் பங்குபெற்று கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அங்கே கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். ஆறாம்திணை இணைய இதழில் அவை வெளியாகின. கோவில்பட்டி சரவணக்குமார் என்கிற பெயரில் அவை [[நந்தன்]], [[தாமரை (இதழ்)|தாமரை]], [[புதிய பார்வை]] போன்ற இதழ்களில் வெளியாகின. தீவிர இடதுசாரி தனிச் சுற்று இதழ்களிலும் இப்பெயரில் கவிதைகள் வெளியாகின. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கவிதைகள் அவை.  பேராசிரியர்கள் பாரதிபுத்திரன் மற்றும் இளங்கோ இருவரும் தீவிர இலக்கியத்தின் பக்கம் அவரை மடை மாற்றினர். தனியே அவரே 'ஓடம்' என்கிற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் நிதி வசூலித்து நண்பர்களோடு இணைந்து தனிச் சிற்றிதழ் ஒன்றைக் கொண்டு வந்தார். இரண்டு இதழ்களோடு அந்த சிற்றிதழ் நின்று போனது. கல்லூரி விடுதியில் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்துள்ளார்.
* பாவத்தின் சம்பளம்
* பார்பி
* ஐந்து முதலைகளின் கதை
* சுபிட்ச முருகன்
* அத்தாரோ
* லகுடு
* அசோகர்,  
* எக்ஸ்டஸி
* சுபிட்ச முருகன்


=== கட்டுரைத்தொகுப்பு ===
சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அசோகர்' நாவல் 2021-ம் ஆண்டு வெளியானது. சரவணன் சந்திரன் முதன்மையாக நாவல்களையே எழுதிவருகிறார். சமூகவலைத்தளங்களில் விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அனுபவக்குறிப்புகளையும் எழுதிவருகிறார்.


* அன்பும் அறமும்
'எழுத்துக்களில் சமகாலத்தைப் பதிவு செய்வதின் வழியாக சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும், பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன்' என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார்.
* மதிகெட்டான் சோலை
* கடலும் மகனும்
* வையிலைவேற் காளை
* தற்செயல்களை விரட்டுகிறவன்


=== சிறுகதைத் தொகுதி ===
== விருதுகள் ==
* 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கு 2016-ம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.
== இலக்கிய இடம்==
நவீன உலகின் அரசியல், குடும்பம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகும் மனிதர்களைப் பேசுபவை சரவணன்சந்திரனின் படைப்புகள். சரவணன் சந்திரன் எழுத்தாளர்கள் [[கி. ராஜநாராயணன்]], [[ஜெயமோகன்]], [[ஆதவன்]], [[தேவதச்சன்]], மனுஷ்யபுத்திரன், [[சாரு நிவேதிதா]], [[கோணங்கி]] [[சோ._தர்மன்|சோ.தர்மன்]] ஆகியோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.


* வெண்ணிற ஆடை
ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் [[சாரு நிவேதிதா]] "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்<ref>[http://charunivedita.online/blog/?p=4356 சரவணன் சந்திரனின் 'ரோலக்ஸ் வாட்ச்’ : ஒரு மதிப்புரை – Charu Nivedita]</ref>.


சரவணன் சந்திரனின் படைப்புகளை பற்றி குறிப்பிடும் பொழுது, எழுத்தாளர் [[ஜெயமோகன்]], "அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை... கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை. மாறாக 'சுபிட்ச முருகன்' ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று." என கூறுகிறார். <ref>[https://www.jeyamohan.in/113638/ திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]</ref>
== படைப்புகள் ==
=====நாவல்கள்=====
* ஐந்து முதலைகளின் கதை, 2015
* ரோலக்ஸ் வாட்ச், 2016
* அஜ்வா, 2016
* பார்பி, 2017
* சுபிட்ச முருகன், 2019
* லகுடு, 2019 
* அத்தாரோ, 2021 
* அசோகர், 2021
=====கட்டுரைத்தொகுப்புகள்=====
* எக்ஸ்டஸி, 2003, 
* மதிகெட்டான் சோலை, 2017, 
* அன்பும் அறமும், 2019,
* கடலும் மகனும், 2019 
* வையிலைவேற் காளை, 2020
* தற்செயல்களை விரட்டுகிறவன், 2021
* பரிபூரண கம்யூனிஸ்ட்2023
=====கதைத்தொகுதிகள் =====
* வெண்ணிற ஆடை, 2003,
* பாவத்தின் சம்பளம், 2017
* தானச் சோறு 2023
* ஜிலேபி 2023
* மறிக்குட்டி 2024
===== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் =====
* Tale of Five Crocodiles, Zero Degree Publishing, 2020
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
<nowiki>https://minnambalam.com/k/2016/03/26/1458950466</nowiki>
* [https://minnambalam.com/k/2016/03/26/1458950466 நீரா ராடியாக்களின் உலகத்தினுள் உலவும் ஒரு சாமானியனின் கதைதான் என் நாவல்கள் – சரவணன் சந்திரன், மின்னம்பலம்.காம்]
 
* [http://charunivedita.online/blog/?p=4356 சரவணன் சந்திரனின் 'ரோலக்ஸ் வாட்ச்’: ஒரு மதிப்புரை, சாரு நிவேதிதா]
<nowiki>http://charunivedita.online/blog/?p=4356</nowiki>
* [https://www.jeyamohan.in/115868/ விஷ்ணுபுரம் 2018 சிறப்பு விருந்தினர் - சரவணன் சந்திரன்]
 
* [https://www.hindutamil.in/news/blogs/84105-.html புது எழுத்து | சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!, இந்து குணசேகர், இந்துதமிழ் திசை]
<nowiki>https://www.jeyamohan.in/115868/</nowiki>
* [https://www.jeyamohan.in/113638/ திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன், ஜெயமோகன்.இன்]
 
== அடிக்குறிப்புகள் ==
This page is being created by [[User:Rajesharo]]
<references />


{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 08:15, 24 February 2024

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் (பிறப்பு: ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர்.

பிறப்பு, கல்வி

பிறப்பு

சரவணன் சந்திரன் ஜூன் 25, 1979-ல் அவரது தாயின் சொந்த ஊரான காக்கா தோப்பில் (மதுரை) பிறந்தார். தாத்தா மற்றும் பாட்டியுடன் வளர்ந்தார். தந்தை சந்திரன். தாய் சாந்தி. தங்கை மகாலட்சுமி.

கல்வி

சரவணன் தனது ஆரம்பக் கல்வியினை காக்காத்தோப்பு சூரியநாராயண சாஸ்திரிகள் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். ஒன்றாம் வகுப்பில் தந்தையின் சொந்த ஊரான தேனிக்கு இடம்பெயர்ந்தார். 3-ம் வகுப்பு படிக்கும்போது அவரது குடும்பம் வேலை நிமித்தமாக கோவில்பட்டியில் குடியேறியது. கோவில்பட்டியில் நாடார் பள்ளியில் படித்துக் கொண்டே ஹாக்கி விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தார்.

விளையாட்டு

பள்ளிக் காலத்தில் சரவணன் சந்திரன் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்தில் அமைந்துள்ள தமிழக அரசு விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தகுதியில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்தது.

மாநில அளவில் ஹாக்கி விளையாட்டில் கல்லூரி சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயில்கையில் ஒரு விபத்தில் சிக்கியதால் மேற்கொண்டு விளையாட்டைத் தொடரமுடியாத நிலைக்குச் சென்றார்.

தனிவாழ்க்கை

சரவணன் சந்திரனின் மனைவி பவித்ரா.

சரவணன் இதழியலாளராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றினார். தகவல்தொடர்பு (பிபிஓ) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பிற நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் துறையிலும் ஈடுபட்டிருந்தார். கிழக்கு தைமூர், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வியாபார நிமித்தமாக 2 ஆண்டுகள் வரை தங்கியுள்ளார். மீன் வியாபாரத்திற்கான நிறுவனம் ஒன்றை தொடங்கி மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். பழனியில் கொய்யா, பேரிட்சை பயிரிடும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா விவாதங்களில் பங்கெடுத்துள்ளார்.

ஊடகவியல்

சரவணன் சந்திரன் ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். காலச்சுவடு நடத்திய உலகத்தமிழ்.காம் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். காலச்சுவடு பத்திரிகையிலும் குறுகிய காலம் துணையாசிரியராக இருந்தார். பிறகு 'இந்தியா டுடே' இதழில் பணியாற்றினார்.

சரவணன் சந்திரன் காட்சி ஊடகமான விஜய் தொலைகாட்சியில் 'குற்றம் நடந்தது என்ன' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் இயக்கத்தில் பணியாற்றினார். "சொல்வதெல்லாம் உண்மை", ஒரு தாயின் சபதம், கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சிகளின் இயக்குனராக 200 நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியிலும், 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் இயக்கத்திலும், நிர்வாகத்திலும் பங்கெடுத்துள்ளார். தொலைக்காட்சிகளில் ஆயிரம் நிகழ்ச்சிகள் வரை இயக்குனராக இருந்து பணியாற்றி இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சரவணன் சந்திரனின் சிறுவயதில் தாய் மற்றும் அத்தை பசுபதி ஆகியோர் புத்தகங்களைப் படிப்பதற்கு ஊக்குவித்தனர். கல்லூரி வாழ்வில் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வாசித்து இலக்கியம் பக்கம் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற இலக்கிய அமைப்பில் பங்குபெற்று கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அங்கே கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். ஆறாம்திணை இணைய இதழில் அவை வெளியாகின. கோவில்பட்டி சரவணக்குமார் என்கிற பெயரில் அவை நந்தன், தாமரை, புதிய பார்வை போன்ற இதழ்களில் வெளியாகின. தீவிர இடதுசாரி தனிச் சுற்று இதழ்களிலும் இப்பெயரில் கவிதைகள் வெளியாகின. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கவிதைகள் அவை. பேராசிரியர்கள் பாரதிபுத்திரன் மற்றும் இளங்கோ இருவரும் தீவிர இலக்கியத்தின் பக்கம் அவரை மடை மாற்றினர். தனியே அவரே 'ஓடம்' என்கிற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் நிதி வசூலித்து நண்பர்களோடு இணைந்து தனிச் சிற்றிதழ் ஒன்றைக் கொண்டு வந்தார். இரண்டு இதழ்களோடு அந்த சிற்றிதழ் நின்று போனது. கல்லூரி விடுதியில் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்துள்ளார்.

சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அசோகர்' நாவல் 2021-ம் ஆண்டு வெளியானது. சரவணன் சந்திரன் முதன்மையாக நாவல்களையே எழுதிவருகிறார். சமூகவலைத்தளங்களில் விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அனுபவக்குறிப்புகளையும் எழுதிவருகிறார்.

'எழுத்துக்களில் சமகாலத்தைப் பதிவு செய்வதின் வழியாக சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும், பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன்' என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கு 2016-ம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

நவீன உலகின் அரசியல், குடும்பம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகும் மனிதர்களைப் பேசுபவை சரவணன்சந்திரனின் படைப்புகள். சரவணன் சந்திரன் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், ஜெயமோகன், ஆதவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, கோணங்கி சோ.தர்மன் ஆகியோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். "இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்[1].

சரவணன் சந்திரனின் படைப்புகளை பற்றி குறிப்பிடும் பொழுது, எழுத்தாளர் ஜெயமோகன், "அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை... கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை. மாறாக 'சுபிட்ச முருகன்' ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று." என கூறுகிறார். [2]

படைப்புகள்

நாவல்கள்
  • ஐந்து முதலைகளின் கதை, 2015
  • ரோலக்ஸ் வாட்ச், 2016
  • அஜ்வா, 2016
  • பார்பி, 2017
  • சுபிட்ச முருகன், 2019
  • லகுடு, 2019
  • அத்தாரோ, 2021
  • அசோகர், 2021
கட்டுரைத்தொகுப்புகள்
  • எக்ஸ்டஸி, 2003,
  • மதிகெட்டான் சோலை, 2017,
  • அன்பும் அறமும், 2019,
  • கடலும் மகனும், 2019
  • வையிலைவேற் காளை, 2020
  • தற்செயல்களை விரட்டுகிறவன், 2021
  • பரிபூரண கம்யூனிஸ்ட்2023
கதைத்தொகுதிகள்
  • வெண்ணிற ஆடை, 2003,
  • பாவத்தின் சம்பளம், 2017
  • தானச் சோறு 2023
  • ஜிலேபி 2023
  • மறிக்குட்டி 2024
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • Tale of Five Crocodiles, Zero Degree Publishing, 2020

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page