under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1983

From Tamil Wiki
Revision as of 07:24, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1983

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி வேதாவுக்குப் புரியாது! அனுராதா ரமணன் சாவி
பிப்ரவரி கண்களில் அடங்கும் வானம் ம.ந.ராமசாமி தினமணி கதிர்
மார்ச் புதிய நோக்குகள் ரேவதி பாலு இதயம் பேசுகிறது
ஏப்ரல் நிறை வண்ணதாசன் தீபம்
மே ஏக்கம் கார்த்திகா ராஜ்குமார் சாவி
ஜூன் தயவு செய்து... களந்தை பீர்முகம்மது தாமரை
ஜூலை தூண் பாவண்ணன் தீபம்
ஆகஸ்ட் தாயும் தாயும் ஹ. ஶ்ரீபாத் கணையாழி
செப்டம்பர் வெள்ளை நிறத்தொரு பூனை மல்லிக் ரங்கநாதன் ஆனந்த விகடன்
அக்டோபர் ஒருவழிப் பாதை எஸ். குமார் சாவி
நவம்பர் கூட்டாஞ்சோறு ஜெகாதா கணையாழி
டிசம்பர் கப்பு கான்வென்டுக்குப் போகிறாள்! கே.பி. நீலமணி தினமணி கதிர்

1983-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1983-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, களந்தை பீர்முகம்மது எழுதிய ‘தயவு செய்து’ தேர்ந்தெடுக்கப்பட்டது. நீல பத்மநாபன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை ராசி. அழகப்பன் தேர்வு செய்தார்.

உசாத்துணை


✅Finalised Page