under review

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

From Tamil Wiki
Revision as of 22:49, 26 February 2026 by ASN (talk | contribs) (→‎தொடக்கம்: Link Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (1961) தமிழகத்தில் இயங்கும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.

தொடக்கம்

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஜீவானந்தத்தால் 1961-ல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளுமைகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் ஆரம்ப காலங்களில் பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே.சி.எஸ். அருணாச்சலம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், தா. பாண்டியன், தொ.மு.சி. ரகுநாதன், தனுஷ்கோடி ராமசாமி, வாய்மைநாதன், தத்துவ ஆய்வாளர் வானமாமலை, தி.க.சி, நாட்டுப்புறக் கலைஞர் கே.ஏ. குணசேகரன், கைலாசமூர்த்தி, ஹைகூ கவிஞர் ரசூல் எனப் பல இலக்கியவாதிகள் இயங்கிய அமைப்பு.

செயல்பாடுகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனர் ப.ஜீவானந்தத்தின் பிறந்த நாளில் கவிதை, ஆய்வுக்கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றன . திணை (இதழ்) கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்தது

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 09:56:03 IST