திணை (இதழ்)
From Tamil Wiki
திணை (இதழ்) கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த இதழ்
வெளியீடு
திணை இதழ் கன்னியகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ். நட.சிவகுமார் பொறுப்பாசிரியர். இதன் நிர்வாக ஆசிரியர் சி. சொக்கலிங்கம், ஆசிரியர் வி.சிவராமன். தொடங்கப்பட்டு ஐந்து இதழ்களுக்குப் பின் இடை நின்று மீண்டும் ஆறாவது இதழ் டிசம்பர் 2014 - மார்ச் 2015 வெளியானது.
உள்ளடக்கம்
இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்ற இதழாக வெளிவந்த இதழ். அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கவிதைகள், விமர்சனங்கள் முதன்மையாக வெளிவந்த இதழ்.
பங்களிப்பாளர்கள்
- பொன்னீலன்
- கால சுப்ரமணியம்
- டி. தர்மராஜ்
- மதுமிதா
- ஆர். அபிலாஷ்
- ரோஸ் ஆன்றா
- எச். முஜிப் ரஹ்மான்
- மீரான் மைதீன்
- ந. முத்துமோகன்
- மேலாண்மை பொன்னுசாமி
உசாத்துணை
✅Finalised Page