under review

மெய்கண்ட சாத்திரங்கள்

From Tamil Wiki
Revision as of 05:31, 2 November 2024 by SakthivelS (talk | contribs) (→‎நூல்கள்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மெய்கண்ட சாத்திரங்கள் (பொ.யு. 12-14-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்.

தோற்றம்

பொ.யு. 12 முதல் 14--ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சைவ சித்தாந்தத்தை விளக்க நூல்கள் எழுதப்பட்டன. இதில் மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் முதன்மையாகக் கருதப்பட்டது. இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் 14 சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்கள் எழுதப்பட்டன. சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி எழுதியதால் இவை மெய்கண்ட சாத்திரங்கள் என்றழைக்கப்பட்டன.

14 சாத்திரங்களையும் நினைவூட்டும் வெண்பா

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று

நூல்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 07:54:20 IST