அருட்பெருஞ்ஜோதி அகவல்

From Tamil Wiki
Revision as of 22:56, 28 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

'அருட்பெருஞ்ஜோதி அகவல்' என்பது 1596 அடிகளைக் கொண்ட பாடல். இது வள்ளலார் இராமலிங்க அடிகள் எழுதிய திருவருட்பா தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. வள்ளலார் இதனை ஒரே இரவில் எழுதியதாகத் தொன்மக் கதைகள் கூறுகின்றன. தமிழ் இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக, வள்ளலார் அருளிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' கருதப்படுகிறது.