மெய்க்கீர்த்திமாலை
From Tamil Wiki
Revision as of 16:36, 15 November 2023 by Logamadevi (talk | contribs)
மெய்க்கீர்த்திமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். சொற்சீரடி எனப்படும் கட்டுரைச் செய்யுள்களால் மரபுவழியாக வரும் தலைவனின் புகழை விரிவாகக் கூறுதல் மெய்க்கீர்த்திமாலை
சொற்சீர் அடியான் தொழில்படு கீர்த்தியைப்
பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை. -
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 865
யாழ்ப்பாணம் முத்துராசர் எழுதிய, யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறும் கைலாயமாலை காப்பு நீங்கலாக 310 இரண்டுவரிக் கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற இரு சிற்றிலக்கிய வகைகளின் பாடுபொருள், யாப்பு இவற்றின் கலவையாக அமைந்தது.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page