being created

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது

From Tamil Wiki
Revision as of 00:32, 21 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது - உ.வே.சா. (இரண்டாம் பதிப்பு - 1931)

தூது இலக்கிய நூல்களுள் ஒன்று, கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது. கச்சி எனப்படும் காஞ்சியில் வீற்றிருக்கும் கடவுளான ஆனந்த ருத்திரேசர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, வண்டினைத் தூதாக விடுத்ததாகப் பாடப்பட்ட நூல் இது. இதனை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இந்நூலில் 504 கண்ணிகள் அமைந்துள்ளன. இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு. இதனை அச்சிட்டு வெளியிட்டவர். உ.வே. சாமிநாதையர்.

பிரசுரம், வெளியீடு

உ.வே. சாமிநாதையர், 1888 ஆம் ஆண்டில், முதன் முதலில் வெளியிட்ட நூல் கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது. இந்நூலை மேலும் விரிவாக்கி, இரண்டாம் பதிப்பினை 1931 ஆம் ஆண்டு வெளியிட்டார். தொடர்ந்து பல பதிப்புகள், பலரால் வெளியிடப்பட்டன.

ஆசிரியர் குறிப்பு

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது நூலை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இவர் கவி ராட்சசன் என்று போற்றப்பட்டார். திருத்தணியில் வாழ்ந்த இவர், பல புராண, சிற்றிலக்கிய நூல்களை இயற்றினார். கச்சியப்ப முனிவரையும், அவரது சமகாலப் புலவரான சிவஞான முனிவரையும் ஒன்றாகச் சேர்த்து 'பட்டர் இருவர்' எனச் சான்றோர் உலகம் பெருமைப்படுத்தியது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.