சுஜித் லெனின்
சுஜித் லெனின் (பிறப்பு: டிசம்பர் 12, 1988) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
சுஜித் லெனின் திருச்சிராப்பள்ளி வியாழன்மேடு கிராமத்தில் பழனிவேல், சின்னப்பொண்ணு இணையருக்கு டிசம்பர் 12, 1988-ல் பிறந்தார். திருச்சிராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். திண்டுக்கல் TELC நடுநிலைப்பள்ளியிலும், டட்லி மேல் நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் ஈ.வெ.ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புவியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2011-ல் புவியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
சுஜித் லெனின் பிப்ரவரி 14, 2021-ல் சசிகலாவை மணந்தார். மகள் சிற்பச்சுடர் மௌனா
இலக்கிய வாழ்க்கை
சுஜித் லெனினின் முதல் சிறுகதைத்தொகுப்பு 'பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்' 2023-ல் எதிர்வெளியீடாக வந்தது. சிறுகதைகள், சிறுகதை வடிவிலான 330 நுண்கதைகளாலும் ஆனது இத்தொகுப்பு. முதல் சிறுகதை 'நல்லவேளை' 2018-ல் வெளியானது. உயிர் எழுத்து, நடுகல், சீர், அகநாழிகை, தினவு, அம்ருதா, மலைகள்.இன், வாசகசாலை, கலகம், நடுகல் ஆகிய இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளி வந்தன. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜோ டி குரூஸ், கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
சிறுகதைத்தொகுப்பு
- பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் (எதிர் வெளியீடு, 2023)
இணைப்புகள்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.