under review

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்

From Tamil Wiki
Revision as of 09:34, 15 August 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரில் சாந்தா பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவர். திருமலை சேதுபதிகளின்(1845-1670) ஆதரவைப் பெற்றவர். பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன்கள் சாந்துப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், கம்பையூர் சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்க்கோவை, சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது கேள்விக்கோவை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த உரை ஆகிய நூல்களை இயற்றினார்.

மறைவு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் 1801-இல் தன் மகன் சாந்துப்புலவர் சிவகங்கை மருதுபாண்டியன் பகைவர் கையில் சிக்குண்டதை அறிந்து வருந்தி சிறுகம்பையூரில் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருச்செந்தூர்க்கோவை
  • சேதுபதி அமைச்சர் தாமோதரன் கேள்விக்கோவை
  • வேதாந்த சூடாமணி
  • சித்தாந்த உரை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.