வருக்கக் கோவை
From Tamil Wiki
Revision as of 14:50, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை[1]. இதன் பாடுபொருள் அகத்துறைப் பொருள். இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.
வருக்கக் கோவை நூல்கள்
- மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
- மாறன் வருக்கக் கோவை
- நெல்லை வருக்கக் கோவை
- மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை
- உயிர் வருக்கக் கோவை
- கபிலமலை வருக்கக் கோவை
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
- ↑
உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.- வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.