இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2003
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2003
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | எதிர்ப்புக் குரல் | நரசய்யா | ஆனந்த விகடன் |
பிப்ரவரி | மகாதானபுரம் ரயில்வே கேட் | இசட். ஒய். ஹிம்ஸாகர் | குமுதம் |
மார்ச் | அத்தையின் கட்டில் | லக்ஷ்மி ரமணன் | அமுதசுரபி |
ஏப்ரல் | சொல் | இரா. சோமசுந்தரம் | கல்கி |
மே | மாலை மலர்ச்சி | ஆர்.சூடாமணி | குங்குமம் |
ஜூன் | மூன்றாவது துலுக்கு | மயூரா ரத்தினசாமி | தீம்தரிகிட |
ஜூலை | பொன் வேலி | மதுரா | அமுதசுரபி |
ஆகஸ்ட் | மனசு | வி. உஷா | குமுதம் |
செப்டம்பர் | வேர்கள் | அன்னம் | கலைமகள் |
அக்டோபர் | பனிப் பாறைகள் | தர்ஷன் வித்யா | குமுதம் |
நவம்பர் | மற்றொரு பொழுது... | பாரதிபாலன் | கணையாழி |
டிசம்பர் | எந்தச் சாமி? | ரெ. கார்த்திகேசு | தீராநதி |
2003-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
2003-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, வி. உஷா எழுதிய ‘மனசு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஞா. மாணிக்கவாசகன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை கமலா ரங்கநாதன் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page