மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: Difference between revisions
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
(Removed non-breaking space character) |
||
Line 7: | Line 7: | ||
===== அகநானூறு 102 ===== | ===== அகநானூறு 102 ===== | ||
* [[குறிஞ்சித் திணை]] | * [[குறிஞ்சித் திணை]] | ||
* இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் | * இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது | ||
* தினைக்கதிர் போல வளைந்த கொம்புகளை உள்ள வலிமை மிக்க உளைமான் தினைப்புனத்தில் மேய வருகிறது. தினைக்கு உரிய கானவன் கழுது என்னும் மேடைப் பந்தலின் மேல் ஏறிக் காவல் புரிகிறான். அவன் கையால் பிழிந்து பிழிச்சாறு உண்டான். அவன் சந்தனக் கட்டையைத் தன் கையால் உரைத்துப் பூசிக்கொண்டான். சாறு பிழிந்ததும், சந்தனம் உரைத்ததுமான தன் கையால் தலைமயிரைக் கோதி உலர்த்திக்கொள்கிறான். | * தினைக்கதிர் போல வளைந்த கொம்புகளை உள்ள வலிமை மிக்க உளைமான் தினைப்புனத்தில் மேய வருகிறது. தினைக்கு உரிய கானவன் கழுது என்னும் மேடைப் பந்தலின் மேல் ஏறிக் காவல் புரிகிறான். அவன் கையால் பிழிந்து பிழிச்சாறு உண்டான். அவன் சந்தனக் கட்டையைத் தன் கையால் உரைத்துப் பூசிக்கொண்டான். சாறு பிழிந்ததும், சந்தனம் உரைத்ததுமான தன் கையால் தலைமயிரைக் கோதி உலர்த்திக்கொள்கிறான். | ||
* அவன் மனைவி கொடிச்சி மலையே எதிரொலிக்கும்படி, குறிஞ்சிப் பண்ணால் பாட்டுப் பாடுகிறாள். யானை தினையை மேய வருகிறது. கதிர்களை அது உண்ணாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு கண் மூடாமல் உறங்குகிறது. | * அவன் மனைவி கொடிச்சி மலையே எதிரொலிக்கும்படி, குறிஞ்சிப் பண்ணால் பாட்டுப் பாடுகிறாள். யானை தினையை மேய வருகிறது. கதிர்களை அது உண்ணாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு கண் மூடாமல் உறங்குகிறது. | ||
* அவன் | * அவன் மார்பில் சந்தனம் பூசியிருந்தான். அவன் மார்பில் சூடிய பூமாலையிலும், தலையில் இருக்கும் கண்ணியிலும் சிறுவண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்ததன. கையிலே வேல் வைத்திருந்தான். நம் வீட்டுக் காவலாளிகளை ஒதுங்கச் செய்துவிட்டு மெதுவாக வந்தான். வீட்டுக் கதவை அசைத்து உள்ளே நுழைந்தான். பெருமூச்சு விட்டுக்கொண்டு என் தோளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். இனிய சொற்கள் பலவற்றைப் பேசினான். திரும்பிச் சென்றுவிட்டான் | ||
* அவன் இன்றும் எதற்காகவோ வந்திருக்கிறான். அவன் எனக்கு எதுவும் தரவில்லையென்றாலும் ஊர் எங்களைப் பற்றி பேசுகிறது. என் நெற்றி அவனுக்காக ஏங்கிப் பசந்துகிடக்கிறது. ஊரார் பேசுவது அவனுக்கு உவப்பாக இருக்கிறது. எனக்கோ துன்பமாக இருக்கிறது. என்ன செய்வேன் தோழி? | * அவன் இன்றும் எதற்காகவோ வந்திருக்கிறான். அவன் எனக்கு எதுவும் தரவில்லையென்றாலும் ஊர் எங்களைப் பற்றி பேசுகிறது. என் நெற்றி அவனுக்காக ஏங்கிப் பசந்துகிடக்கிறது. ஊரார் பேசுவது அவனுக்கு உவப்பாக இருக்கிறது. எனக்கோ துன்பமாக இருக்கிறது. என்ன செய்வேன் தோழி? | ||
===== அகநானூறு 348 ===== | ===== அகநானூறு 348 ===== | ||
* குறிஞ்சித் திணை | * குறிஞ்சித் திணை | ||
* தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, | * தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. | ||
* தேன் போல் சுவைக்கும் மாம்பழம், பலாச்சுளை, இறால் மூன்றையும் கூழாக்கி மூங்கில் குழாயில் | * தேன் போல் சுவைக்கும் மாம்பழம், பலாச்சுளை, இறால் மூன்றையும் கூழாக்கி மூங்கில் குழாயில் அடைத்துப் பாம்பு கடித்தது போலக் கடுப்பு ஏறும்படி வைத்திருந்த “தோப்பி” என்னும் கள்ளைப் பருகிய மகளிர் தினைப்புனத்தைச் சரியாகக் காக்காததால் யானை தினையை மேய்ந்துவிட்டது. | ||
* இதனால், ஊரிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் கையில் வில்லை வைத்துக்கொண்டு யானை ஓட்டத் திரியும் மலைநாட்டை உடையவன் அவன். அவன் பேச்சை நம்பிய என் நெஞ்சு என்ன ஆவது? | * இதனால், ஊரிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் கையில் வில்லை வைத்துக்கொண்டு யானை ஓட்டத் திரியும் மலைநாட்டை உடையவன் அவன். அவன் பேச்சை நம்பிய என் நெஞ்சு என்ன ஆவது? | ||
===== நற்றிணை 273 ===== | ===== நற்றிணை 273 ===== | ||
* குறிஞ்சித் திணை | * குறிஞ்சித் திணை | ||
* தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், <nowiki>''நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்''</nowiki> என்பது படச் சொல்லியது. | * தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், <nowiki>''நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்''</nowiki> என்பது படச் சொல்லியது. | ||
* தோழி! இது ஏன் நடக்கிறது? | * தோழி! இது ஏன் நடக்கிறது? அவன் என்னை மணந்துகொள்ளவில்லையே என்று நான் வருந்துகிறேன். | ||
* என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் என் வருத்தத்தைக் | * என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் என் வருத்தத்தைக் கண்டு துன்புற்று, வேலனை வினவ, அவன் “வெறி” என்று கூறுகிறான். | ||
* இது ஏன் நடக்கிறது? கருவண்ணம் மிகுந்த தலைமை யானை நீர் நிறைந்திருக்கும் நீண்ட சுனையில் நீராடுகிறது. | * இது ஏன் நடக்கிறது? கருவண்ணம் மிகுந்த தலைமை யானை நீர் நிறைந்திருக்கும் நீண்ட சுனையில் நீராடுகிறது. அப்போது நீரலை மோதி என் கண்ணைப் போல் இருக்கும் நீல மலர் தன் கண்ணைத் திறந்து மணக்கிறது. | ||
* இப்படி மணக்கும் குன்றத்தைக் | * இப்படி மணக்கும் குன்றத்தைக் கொண்ட தலைவன் நடந்துகொள்ளும் பண்பை நினைக்கும்போது நெஞ்சே நடுங்குகிறது. | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
===== அகநானூறு 102 ===== | ===== அகநானூறு 102 ===== | ||
Line 59: | Line 59: | ||
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai(14)adiyanvinnattanar.pdf சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai(14)adiyanvinnattanar.pdf சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | ||
[https://vaiyan.blogspot.com/2016/05/agananuru-102.html?m=1 அகநானூறு 102, | [https://vaiyan.blogspot.com/2016/05/agananuru-102.html?m=1 அகநானூறு 102, தமிழ்த் துளி இணையதளம்] | ||
[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_102.html அகநானூறு 102, தமிழ் சுரங்கம் இணையதளம்] | [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_102.html அகநானூறு 102, தமிழ் சுரங்கம் இணையதளம்] | ||
[https://vaiyan.blogspot.com/2016/10/agananuru-348.html?m=1 அகநானூறு 348, | [https://vaiyan.blogspot.com/2016/10/agananuru-348.html?m=1 அகநானூறு 348, தமிழ்த் துளி இணையதளம்] | ||
[https://vaiyan.blogspot.com/2016/12/natrinai-273.html?m=1 நற்றிணை 273, தமிழ்த் துளி இணையதளம்] | [https://vaiyan.blogspot.com/2016/12/natrinai-273.html?m=1 நற்றிணை 273, தமிழ்த் துளி இணையதளம்] |
Revision as of 14:52, 31 December 2022
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களான அகநானூறு மற்றும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என்னும் பெயரைக் கொண்டு இளம்பால் என்ற ஊரில் ஆசிரியப் பணிபுரிந்த சேந்தன் என்பவரின் மகன் கூத்தனார் என்றும் இவர் மதுரைக்கு வந்து வாழ்ந்தவர் எனவும் கருதப்படுகிறது. சேந்தன் என்னும் பெயர் சேயோனாகிய முருகனைக் குறிப்பது. இளம்பாலாசிரியன் என்னும் சொல் இளையவர்களுக்கு கல்வி கற்பித்தவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களான அகநானூற்றில் 102, 348 மற்றும் நற்றிணையில் 273- வது பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவரது மூன்று பாடல்களுமே குறிஞ்சித் திணையில் அமைந்து தலைவின் ஏக்கத்தை பேசு பொருளாகக் கொண்டுள்ளன.
பாடல்களால் அறியவரும் செய்திகள்
அகநானூறு 102
- குறிஞ்சித் திணை
- இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது
- தினைக்கதிர் போல வளைந்த கொம்புகளை உள்ள வலிமை மிக்க உளைமான் தினைப்புனத்தில் மேய வருகிறது. தினைக்கு உரிய கானவன் கழுது என்னும் மேடைப் பந்தலின் மேல் ஏறிக் காவல் புரிகிறான். அவன் கையால் பிழிந்து பிழிச்சாறு உண்டான். அவன் சந்தனக் கட்டையைத் தன் கையால் உரைத்துப் பூசிக்கொண்டான். சாறு பிழிந்ததும், சந்தனம் உரைத்ததுமான தன் கையால் தலைமயிரைக் கோதி உலர்த்திக்கொள்கிறான்.
- அவன் மனைவி கொடிச்சி மலையே எதிரொலிக்கும்படி, குறிஞ்சிப் பண்ணால் பாட்டுப் பாடுகிறாள். யானை தினையை மேய வருகிறது. கதிர்களை அது உண்ணாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு கண் மூடாமல் உறங்குகிறது.
- அவன் மார்பில் சந்தனம் பூசியிருந்தான். அவன் மார்பில் சூடிய பூமாலையிலும், தலையில் இருக்கும் கண்ணியிலும் சிறுவண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்ததன. கையிலே வேல் வைத்திருந்தான். நம் வீட்டுக் காவலாளிகளை ஒதுங்கச் செய்துவிட்டு மெதுவாக வந்தான். வீட்டுக் கதவை அசைத்து உள்ளே நுழைந்தான். பெருமூச்சு விட்டுக்கொண்டு என் தோளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். இனிய சொற்கள் பலவற்றைப் பேசினான். திரும்பிச் சென்றுவிட்டான்
- அவன் இன்றும் எதற்காகவோ வந்திருக்கிறான். அவன் எனக்கு எதுவும் தரவில்லையென்றாலும் ஊர் எங்களைப் பற்றி பேசுகிறது. என் நெற்றி அவனுக்காக ஏங்கிப் பசந்துகிடக்கிறது. ஊரார் பேசுவது அவனுக்கு உவப்பாக இருக்கிறது. எனக்கோ துன்பமாக இருக்கிறது. என்ன செய்வேன் தோழி?
அகநானூறு 348
- குறிஞ்சித் திணை
- தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது.
- தேன் போல் சுவைக்கும் மாம்பழம், பலாச்சுளை, இறால் மூன்றையும் கூழாக்கி மூங்கில் குழாயில் அடைத்துப் பாம்பு கடித்தது போலக் கடுப்பு ஏறும்படி வைத்திருந்த “தோப்பி” என்னும் கள்ளைப் பருகிய மகளிர் தினைப்புனத்தைச் சரியாகக் காக்காததால் யானை தினையை மேய்ந்துவிட்டது.
- இதனால், ஊரிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் கையில் வில்லை வைத்துக்கொண்டு யானை ஓட்டத் திரியும் மலைநாட்டை உடையவன் அவன். அவன் பேச்சை நம்பிய என் நெஞ்சு என்ன ஆவது?
நற்றிணை 273
- குறிஞ்சித் திணை
- தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், ''நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்'' என்பது படச் சொல்லியது.
- தோழி! இது ஏன் நடக்கிறது? அவன் என்னை மணந்துகொள்ளவில்லையே என்று நான் வருந்துகிறேன்.
- என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் என் வருத்தத்தைக் கண்டு துன்புற்று, வேலனை வினவ, அவன் “வெறி” என்று கூறுகிறான்.
- இது ஏன் நடக்கிறது? கருவண்ணம் மிகுந்த தலைமை யானை நீர் நிறைந்திருக்கும் நீண்ட சுனையில் நீராடுகிறது. அப்போது நீரலை மோதி என் கண்ணைப் போல் இருக்கும் நீல மலர் தன் கண்ணைத் திறந்து மணக்கிறது.
- இப்படி மணக்கும் குன்றத்தைக் கொண்ட தலைவன் நடந்துகொள்ளும் பண்பை நினைக்கும்போது நெஞ்சே நடுங்குகிறது.
பாடல் நடை
அகநானூறு 102
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
நற்றிணை 273
இஃது எவன்கொல்லோ- தோழி!- மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?
உசாத்துணை
அகநானூறு 102, தமிழ்த் துளி இணையதளம்
அகநானூறு 102, தமிழ் சுரங்கம் இணையதளம்
அகநானூறு 348, தமிழ்த் துளி இணையதளம்
நற்றிணை 273, தமிழ்த் துளி இணையதளம்
நற்றிணை 273, தமிழ் சுரங்கம் இணையதளம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.