first review completed

ஏ. கே. செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed single quotes)
Line 1: Line 1:
[[File:A.k.chettiar.jpg|thumb|ஏ.கே. செட்டியார்]]
[[File:A.k.chettiar.jpg|thumb|ஏ.கே. செட்டியார்]]
ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். [[ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படம்|காந்தி பற்றிய ஆவணப்பட]]த்தைத் தயாரித்தவர். ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக [[குமரி மலர்]]’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.
ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். [[ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படம்|காந்தி பற்றிய ஆவணப்பட]]த்தைத் தயாரித்தவர். 'உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக '[[குமரி மலர்]]’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல், அ ராம. அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார்.  
அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல், அ ராம. அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார்.  
Line 6: Line 6:
பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக  இருந்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.  
பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக  இருந்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.  
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
படிப்பை முடித்ததும் ஏ. கே. செட்டியார் குடும்ப வணிகத்தை மேற்பார்வை செய்வதற்காக பர்மா சென்றார். அங்கு சில வருடங்கள் நகரத்தார்கள் சார்பில் வெளிவந்த [[தனவணிகன்]]’ இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1935-ல் ஜப்பானுக்குச் சென்று இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்றார். அதன் பிறகு சிறப்புப் பயிற்சிக்காக 1937-ல், நியூயார்க் சென்றார். அங்கு போட்டோகிராபிகல் இன்ஸ்டிட்டியூட்டில் ஓராண்டு பயின்று புகைப்படக் கலையில் சிறப்பு டிப்ளமோ பட்டம் பெற்றார்.  
படிப்பை முடித்ததும் ஏ. கே. செட்டியார் குடும்ப வணிகத்தை மேற்பார்வை செய்வதற்காக பர்மா சென்றார். அங்கு சில வருடங்கள் நகரத்தார்கள் சார்பில் வெளிவந்த '[[தனவணிகன்]]’ இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1935-ல் ஜப்பானுக்குச் சென்று இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்றார். அதன் பிறகு சிறப்புப் பயிற்சிக்காக 1937-ல், நியூயார்க் சென்றார். அங்கு போட்டோகிராபிகல் இன்ஸ்டிட்டியூட்டில் ஓராண்டு பயின்று புகைப்படக் கலையில் சிறப்பு டிப்ளமோ பட்டம் பெற்றார்.  
[[File:Kumari Malar Magazine.jpg|thumb|ஏ.கே. செட்டியாரின் குமரி மலர்]]
[[File:Kumari Malar Magazine.jpg|thumb|ஏ.கே. செட்டியாரின் குமரி மலர்]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தமிழகம் திரும்பிய ஏ.கே. செட்டியார் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார்., ஏ.கே. செட்டியாரின் முதல் மற்றும் ஒரே சிறுகதையான, ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை, 1928-ல், ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. அதன் பிறகு சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், [[ஜோதி (இதழ்)|ஜோதி]], ஹிந்துஸ்தான் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கும் ஏ. கே. செட்டியார், சிறுகதை முயற்சிகளில் ஈடுபடவில்லை  
தமிழகம் திரும்பிய ஏ.கே. செட்டியார் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார்., ஏ.கே. செட்டியாரின் முதல் மற்றும் ஒரே சிறுகதையான, 'சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை, 1928-ல், ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. அதன் பிறகு சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், [[ஜோதி (இதழ்)|ஜோதி]], ஹிந்துஸ்தான் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கும் ஏ. கே. செட்டியார், சிறுகதை முயற்சிகளில் ஈடுபடவில்லை  
====== குமரி மலர் ======
====== குமரி மலர் ======
அக்காலத்தில் செட்டிநாட்டில் புகழ்பெற்றிருந்த 'குமரன்', '[[ஊழியன் (இதழ்)|ஊழியன்]]', 'தமிழ்நாடு', '[[நவசக்தி]]' போன்ற இதழ்களால் ஏ.கே. செட்டியார் ஈர்க்கப்பட்டார். தானும் அது போன்ற இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.
அக்காலத்தில் செட்டிநாட்டில் புகழ்பெற்றிருந்த 'குமரன்', '[[ஊழியன் (இதழ்)|ஊழியன்]]', 'தமிழ்நாடு', '[[நவசக்தி]]' போன்ற இதழ்களால் ஏ.கே. செட்டியார் ஈர்க்கப்பட்டார். தானும் அது போன்ற இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.
Line 15: Line 15:
[[File:Indhiya-Payanangal.jpg|thumb|இந்தியப் பயணங்கள் - ஏ.கே. செட்டியார்]]
[[File:Indhiya-Payanangal.jpg|thumb|இந்தியப் பயணங்கள் - ஏ.கே. செட்டியார்]]
====== பயணக் கட்டுரை நூல்கள் ======
====== பயணக் கட்டுரை நூல்கள் ======
உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டிருந்த ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து  ‘பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பயணக் கும்மி, ஜட்கா சவாரி, பஸ் பயணம், கப்பல் வண்டி, ரயில் வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவு, அவை மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்க்கங்கள் போன்றவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன  
உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டிருந்த ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து  'பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பயணக் கும்மி, ஜட்கா சவாரி, பஸ் பயணம், கப்பல் வண்டி, ரயில் வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவு, அவை மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்க்கங்கள் போன்றவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன  


ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்'. இது 1968-ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது. ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டவை. மனித நேயம், மனிதப் பண்பு போன்றவற்றை முன்னிறுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருந்தன.  
ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்'. இது 1968-ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது. ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டவை. மனித நேயம், மனிதப் பண்பு போன்றவற்றை முன்னிறுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருந்தன.  


ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் ‘உணவு’. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் ‘ஜப்பான்'. இது முதலில் ‘தனவணிகன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலாக வெளிவந்தது.  
ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் 'உணவு’. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் 'ஜப்பான்'. இது முதலில் 'தனவணிகன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலாக வெளிவந்தது.  
[[File:Gandhi film in Tamil.jpg|thumb|ஏ. கே. செட்டியாரின் காந்தி (தமிழில்)]]
[[File:Gandhi film in Tamil.jpg|thumb|ஏ. கே. செட்டியாரின் காந்தி (தமிழில்)]]
[[File:Gandhi Tamil Movie Advt.jpg|thumb|ஏ. கே. செட்டியாரின் காந்தி தமிழ் ஆவணப் படம் வெளியீட்டுக் குறிப்பு]]
[[File:Gandhi Tamil Movie Advt.jpg|thumb|ஏ. கே. செட்டியாரின் காந்தி தமிழ் ஆவணப் படம் வெளியீட்டுக் குறிப்பு]]
Line 29: Line 29:
தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டார். பல நாட்டு அரசுகளிடமிருந்தும் தனியார் அமைப்பினரிடமிருந்தும், காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார்.  
தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டார். பல நாட்டு அரசுகளிடமிருந்தும் தனியார் அமைப்பினரிடமிருந்தும், காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார்.  


1938-ல் ‘டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை உருவாக்கினார். தனது சேகரிப்புகளை அடிப்படையாக வைத்து, 12000 அடி நீளத்தில், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. 1940-ல் அந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்தார். தமிழில் காந்திஜி பற்றி வெளியான முதல் வரலாற்று ஆவணப்படம் அதுதான்.  
1938-ல் 'டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை உருவாக்கினார். தனது சேகரிப்புகளை அடிப்படையாக வைத்து, 12000 அடி நீளத்தில், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. 1940-ல் அந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்தார். தமிழில் காந்திஜி பற்றி வெளியான முதல் வரலாற்று ஆவணப்படம் அதுதான்.  
====== வெளியீடு ======
====== வெளியீடு ======
இந்த ஆவணப் படம் ஆகஸ்ட் 23, 1940-ல் சென்னையில் ராக்ஸி திரையரங்கில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளிவந்தது. ஆனால், சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அஞ்சி திரையரங்குகள் காந்தி ஆவணப் படத்தைத் திரையிட மறுத்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1947 -ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று, புது தில்லியில் இந்தப் படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ல், தமிழிலும் தெலுங்கிலும் மீண்டும் திரையிடப்பட்டது
இந்த ஆவணப் படம் ஆகஸ்ட் 23, 1940-ல் சென்னையில் ராக்ஸி திரையரங்கில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளிவந்தது. ஆனால், சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அஞ்சி திரையரங்குகள் காந்தி ஆவணப் படத்தைத் திரையிட மறுத்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1947 -ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று, புது தில்லியில் இந்தப் படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ல், தமிழிலும் தெலுங்கிலும் மீண்டும் திரையிடப்பட்டது

Revision as of 09:10, 23 August 2022

ஏ.கே. செட்டியார்

ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். 'உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக 'குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.

பிறப்பு, கல்வி

அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல், அ ராம. அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார்.

பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் ஏ. கே. செட்டியார் குடும்ப வணிகத்தை மேற்பார்வை செய்வதற்காக பர்மா சென்றார். அங்கு சில வருடங்கள் நகரத்தார்கள் சார்பில் வெளிவந்த 'தனவணிகன்’ இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1935-ல் ஜப்பானுக்குச் சென்று இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்றார். அதன் பிறகு சிறப்புப் பயிற்சிக்காக 1937-ல், நியூயார்க் சென்றார். அங்கு போட்டோகிராபிகல் இன்ஸ்டிட்டியூட்டில் ஓராண்டு பயின்று புகைப்படக் கலையில் சிறப்பு டிப்ளமோ பட்டம் பெற்றார்.

ஏ.கே. செட்டியாரின் குமரி மலர்

இலக்கிய வாழ்க்கை

தமிழகம் திரும்பிய ஏ.கே. செட்டியார் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார்., ஏ.கே. செட்டியாரின் முதல் மற்றும் ஒரே சிறுகதையான, 'சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை, 1928-ல், ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. அதன் பிறகு சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், ஜோதி, ஹிந்துஸ்தான் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கும் ஏ. கே. செட்டியார், சிறுகதை முயற்சிகளில் ஈடுபடவில்லை

குமரி மலர்

அக்காலத்தில் செட்டிநாட்டில் புகழ்பெற்றிருந்த 'குமரன்', 'ஊழியன்', 'தமிழ்நாடு', 'நவசக்தி' போன்ற இதழ்களால் ஏ.கே. செட்டியார் ஈர்க்கப்பட்டார். தானும் அது போன்ற இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார். ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. ராஜாஜி, கல்கி உள்ளிட்ட பலரது கட்டுரைகள் குமரி மலரில் வெளியாகின. 'அழகின் சிரிப்பை' எழுத பாரதிதாசனை ஊக்குவித்து, அதை குமரி மலரில் வெளியிட்டவர் ஏ. கே. செட்டியார்தான். பாரதியின் அரிய படைப்புகளைத் தேடிக் கண்டறிந்து வெளியிட்டார்.

இந்தியப் பயணங்கள் - ஏ.கே. செட்டியார்
பயணக் கட்டுரை நூல்கள்

உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டிருந்த ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து  'பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பயணக் கும்மி, ஜட்கா சவாரி, பஸ் பயணம், கப்பல் வண்டி, ரயில் வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவு, அவை மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்க்கங்கள் போன்றவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன

ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்'. இது 1968-ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது. ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டவை. மனித நேயம், மனிதப் பண்பு போன்றவற்றை முன்னிறுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருந்தன.

ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் 'உணவு’. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் 'ஜப்பான்'. இது முதலில் 'தனவணிகன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலாக வெளிவந்தது.

ஏ. கே. செட்டியாரின் காந்தி (தமிழில்)
ஏ. கே. செட்டியாரின் காந்தி தமிழ் ஆவணப் படம் வெளியீட்டுக் குறிப்பு

காந்தி பற்றிய ஆவணப்படம்

பார்க்க : ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப்படம்

காந்தி மீது மிகவும் ஈர்ப்புக் கொண்டிருந்த ஏ.கே. செட்டியார் அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கத் தீர்மானித்தார். அதற்காக உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரைத் தொடர்பு கொண்டார். பலருக்குக் கடிதம் எழுதினார். பல்வேறு தகவல்களைத் திரட்டினார். 1937-ல், தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியுடன் முன்பு தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்தார். தேவையான தகவல்களைத் திரட்டினார்.

தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டார். பல நாட்டு அரசுகளிடமிருந்தும் தனியார் அமைப்பினரிடமிருந்தும், காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார்.

1938-ல் 'டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை உருவாக்கினார். தனது சேகரிப்புகளை அடிப்படையாக வைத்து, 12000 அடி நீளத்தில், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. 1940-ல் அந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்தார். தமிழில் காந்திஜி பற்றி வெளியான முதல் வரலாற்று ஆவணப்படம் அதுதான்.

வெளியீடு

இந்த ஆவணப் படம் ஆகஸ்ட் 23, 1940-ல் சென்னையில் ராக்ஸி திரையரங்கில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளிவந்தது. ஆனால், சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அஞ்சி திரையரங்குகள் காந்தி ஆவணப் படத்தைத் திரையிட மறுத்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1947 -ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று, புது தில்லியில் இந்தப் படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ல், தமிழிலும் தெலுங்கிலும் மீண்டும் திரையிடப்பட்டது ஏ.கே.செட்டியார் இப்படத்தை பல்வேறு வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஃபிஜித் தீவு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெளியிட அதி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். 1953-ல், ஹாலிவுட்டுக்குச் சென்று ஆங்கிலத்தில் தயாரித்து வெளியிட்டார். அதன் பின்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத் திரைப்படத்தின் பிரதி, முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் அரிய முயற்சியால், சான்பிரான்ஸிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டது. ஜனவரி 19, 2006-ல் சென்னையில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதன் மற்றொரு பிரதி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆவணப்படத்தின் உள்ளடக்கம்

அரிய இந்த ஆவணப்படத்தில் காந்தியின் பிரிட்டிஷாருக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், உப்பு சத்தியாக்கிரகக் காட்சிகள், காந்தியின் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணங்கள், தொண்டர்களுடான அவரது சொற்பொழிவுகள், பெண் தொண்டர்கள் படை, ராட்டையில் நூல் நூற்பது எனப் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரிய இந்த ஆவணப்படம் யூ ட்யூபிலும் காணக் கிடைக்கிறது[1]. ஆ.இரா.வேங்கடாசலபதியின் முயற்சியினால் காந்தி ஆவணப்பட உருவாக்கத்தை பற்றி ஏ.கே. செட்டியார் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'அண்ணல் அடிச்சுவட்டில்' என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

மறைவு

தன் வாழ்வின் இறுதி வரை தன்னை எவ்விதத்திலும் முன்னிறுத்திக் கொள்ளாது வாழ்ந்த ஏ.கே. செட்டியார், வயது மூப்புக் காரணமாக, செப்டம்பர் 10, 1983-ல் சென்னையில் காலமானார்.

ஆவணம்

  • ஏ. கே. செட்டியாரின் குமரி மலர் இதழ்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • அவரது காந்தி பற்றிய ஆவணப்படத்தின் பிரதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. யூ-ட்யூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.

இலக்கிய/வரலாற்று இடம்

எழுத்தாளர், இதழாளர், புகைப்படக் கலைஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் ஏ.கே. செட்டியார். முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்படுகிறார். முதன் முதலில் தமிழில் மிக விரிவான ஆவணப் படம் ஒன்றை எடுத்த முன்னோடி ஏ. கே. செட்டியார்தான்.

ஜப்பான் - ஏ.கே. செட்டியாரின் முதல் பயணக் கட்டுரை நூல் - 1936
ஏ. கே. செட்டியார் ’குமரி மலர்’ மூலம் பதிப்பித்த நூல்கள்

நூல்கள்

தொகுத்த நூல்கள்
  • புண்ணியவான் காந்தி
  • பண்பு
  • கொய்த மலர்கள்
  • உணவு
பதிப்பித்த நூல்கள்
  • ஜப்பான் கட்டுரைகள்
  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • பயணக் கட்டுரைகள்
  • அண்டை நாடுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கரிபியன் கடலும் கயானாவும்
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • குடகு
  • இட்ட பணி
  • திரையும் வாழ்வும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.