under review

மரபின்மைந்தன் முத்தையா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:கவிஞர்கள் to Category:கவிஞர்Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்)
Line 10: Line 10:
மரபின்மைந்தன் முத்தையா [[நமது நம்பிக்கை]] என்னும் தன்னம்பிக்கை இதழை நடத்திவருகிறார். ரசனை என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.
மரபின்மைந்தன் முத்தையா [[நமது நம்பிக்கை]] என்னும் தன்னம்பிக்கை இதழை நடத்திவருகிறார். ரசனை என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
முத்தையாவின் தாய்வழிப் பாட்டனார் திரு.கை கனகசபைப்பிள்ளை திருக்கடவூரில் ஒரு பெரிய நிலச்சுவான்தார். முத்தையாவின் முன்னோர்கள் திருக்கடையூர் அபிராமி ஆலய அறக்கட்டளைக்கு நிலம் வழங்கியவர்கள். அந்தகட்டளையில் இருந்து 1970-ல் முத்தையாவின் மாமனார் பூம்புகார் பேரவை கல்லூரிக்கு 5 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இறக்கும் வரைக்கும் அதன் தாளாளராக இருந்தார். இதனால் அவரைத் தேடி பெரும் இலக்கிய அறிஞர்கள் படைப்பாளர்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர்.திருமுருக கிருபானந்த வாரியார் நீதியரசர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் அடிக்கடி வருவார்கள். தமிழறிஞர் அறிவொளி அவர்களுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர். திருக்கடவூரில் தேவாரப் பாடசாலை ஒன்றை முத்தையாவின் பாட்டனார் நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததால் மரபிலலக்கிய ஆர்வம் உருவானது. ஒன்பதாம் வகுப்பில் தோற்றிருந்த நிலையில் உறவினர் ஒருவர் பரிசளித்த கவியரசு கண்ணதாசன் கவிதைகள் புத்தகம் அவரை மரபுக்கவிதைகள் எழுதத் தூண்டியது.
முத்தையாவின் தாய்வழிப் பாட்டனார் திரு.கை கனகசபைப்பிள்ளை திருக்கடவூரில் ஒரு பெரிய நிலச்சுவான்தார். முத்தையாவின் முன்னோர்கள் திருக்கடையூர் அபிராமி ஆலய அறக்கட்டளைக்கு நிலம் வழங்கியவர்கள். அந்தகட்டளையில் இருந்து 1970-ல் முத்தையாவின் பாட்டனார் பூம்புகார் பேரவை கல்லூரிக்கு 5 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இறக்கும் வரைக்கும் அதன் தாளாளராக இருந்தார். இதனால் அவரைத் தேடி பெரும் இலக்கிய அறிஞர்கள் படைப்பாளர்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர்.திருமுருக கிருபானந்த வாரியார் நீதியரசர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் அடிக்கடி வருவார்கள். தமிழறிஞர் அறிவொளி அவர்களுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர். திருக்கடவூரில் தேவாரப் பாடசாலை ஒன்றை முத்தையாவின் பாட்டனார் நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததால் மரபிலலக்கிய ஆர்வம் உருவானது. ஒன்பதாம் வகுப்பில் தோற்றிருந்த நிலையில் உறவினர் ஒருவர் பரிசளித்த கவியரசு கண்ணதாசன் கவிதைகள் புத்தகம் அவரை மரபுக்கவிதைகள் எழுதத் தூண்டியது.


மணி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு.க.மீ.வெங்கடேசன் ஊக்குவிக்கவே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பொதுமேடைகளில் பங்கேற்க தொடங்கினார். பள்ளியில் நடைபெறும் கம்பன் விழா சிலப்பதிகார விழா போன்ற பெரிய இலக்கிய விழாக்களில் பேசினார். 12-ம் வகுப்பு படிக்கும்போது சிலப்பதிகார விழாவில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் ’கருணை மறவனுக்கு இவர்கள் கையறுநிலை’ என்கிற தலைப்பில் சிலப்பதிகார பாத்திரங்கள் கோவலனுக்கு இரங்கல் கவிதை பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. கோவலனுக்கு சிலம்பு இரங்கல் பாடுவதாக கவிதை பாட வேண்டிய சொ சொ மீ சுந்தரம் வரவில்லை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அத்தலைப்பில் கவிதை எழுதி பாடுமாறு ஆசிரியர் சொல்ல அதில் முதல் கவிதையை அரங்கேற்றினார்.
மணி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு.க.மீ.வெங்கடேசன் ஊக்குவிக்கவே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பொதுமேடைகளில் பங்கேற்க தொடங்கினார். பள்ளியில் நடைபெறும் கம்பன் விழா சிலப்பதிகார விழா போன்ற பெரிய இலக்கிய விழாக்களில் பேசினார். 12-ம் வகுப்பு படிக்கும்போது சிலப்பதிகார விழாவில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் ’கருணை மறவனுக்கு இவர்கள் கையறுநிலை’ என்கிற தலைப்பில் சிலப்பதிகார பாத்திரங்கள் கோவலனுக்கு இரங்கல் கவிதை பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. கோவலனுக்கு சிலம்பு இரங்கல் பாடுவதாக கவிதை பாட வேண்டிய சொ சொ மீ சுந்தரம் வரவில்லை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அத்தலைப்பில் கவிதை எழுதி பாடுமாறு ஆசிரியர் சொல்ல அதில் முதல் கவிதையை அரங்கேற்றினார்.
Line 17: Line 17:


காவிய மரபுகள் மேல் ஈடுபாடு கொண்ட முத்தையா சிலப்பதிகாரம் திருமுறைகள் கம்பராமாயணம் திருப்புகழ் அபிராமி அந்தாதி உள்ளிட்ட இலக்கியங்களில் பயிற்சி உடையவர். பாரதி, கண்ணதாசன் என்று தொடர்ந்து நவீன இலக்கியங்கள் வரை வாசிப்பு கொண்டவர். [[மு. அருணாசலம்]] முத்தையாவுக்கு உகந்த தமிழாய்வாளர்.
காவிய மரபுகள் மேல் ஈடுபாடு கொண்ட முத்தையா சிலப்பதிகாரம் திருமுறைகள் கம்பராமாயணம் திருப்புகழ் அபிராமி அந்தாதி உள்ளிட்ட இலக்கியங்களில் பயிற்சி உடையவர். பாரதி, கண்ணதாசன் என்று தொடர்ந்து நவீன இலக்கியங்கள் வரை வாசிப்பு கொண்டவர். [[மு. அருணாசலம்]] முத்தையாவுக்கு உகந்த தமிழாய்வாளர்.
== அமைப்புச் செயல்பாடுகள் ==
== அமைப்புச் செயல்பாடுகள் ==
====== வெற்றித்தமிழர் பேரவை ======
====== வெற்றித்தமிழர் பேரவை ======

Revision as of 15:00, 21 December 2024

முத்தையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்தையா (பெயர் பட்டியல்)
மரபின்மைந்தன்

மரபின்மைந்தன் முத்தையா (ஆகஸ்ட் 1, 1968) தமிழ் இலக்கியச் சொற்பொழிவாளர், மரபுக்கவிஞர், பாடலாசிரியர். தமிழறிஞர். பக்திசார்ந்த இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் மரபிலக்கியச் சொற்பொழிவாளராகவும் அறியப்படுபவர்.

பிறப்பு கல்வி

முத்தையா ஆகஸ்ட் 1, 1968 அன்று கோவையில் மு.மருதவாணன் - அலமேலு இணையருக்குப் பிறந்தார். ஒரே ஒரு மூத்த சகோதரர் அவர் பெயர் ராஜன் கனகசபை. மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை ஏ.எல் ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மணி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பு. கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை சமூகவியல் மற்றும் முதுகலை தகவல் தொடர்பியல் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

மரபின் மைந்தன் விருதுபெறுதல்

முத்தையா ஜூன் 13, 1994-ல் பூமாவை மணந்து மார்ச் 23, 1996 வித்யார்த்தி எனும் மகளுக்கு தந்தையானார். சசி விளம்பர நிறுவனம், சென்னை பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் போன்றவிளம்பர நிறுவனங்களின் படைப்பாக்கப் பிரிவில் பணிபுரிந்த இவர் 1994-ல் Copycats Creative Consultancy என்ற பெயரில் படைப்பாக்க ஆலோசனை மையம் ஒன்றைத் தொடங்கினார். கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்பு மேம்பட பல பயிலரங்குகளை நடத்தி வருகிறார். நிறுவனங்களுக்கான ஊழியர்கள் தன்னொழுக்கம், செயல்திறன் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்.

இதழியல்

மரபின்மைந்தன் முத்தையா நமது நம்பிக்கை என்னும் தன்னம்பிக்கை இதழை நடத்திவருகிறார். ரசனை என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

இலக்கியவாழ்க்கை

முத்தையாவின் தாய்வழிப் பாட்டனார் திரு.கை கனகசபைப்பிள்ளை திருக்கடவூரில் ஒரு பெரிய நிலச்சுவான்தார். முத்தையாவின் முன்னோர்கள் திருக்கடையூர் அபிராமி ஆலய அறக்கட்டளைக்கு நிலம் வழங்கியவர்கள். அந்தகட்டளையில் இருந்து 1970-ல் முத்தையாவின் பாட்டனார் பூம்புகார் பேரவை கல்லூரிக்கு 5 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இறக்கும் வரைக்கும் அதன் தாளாளராக இருந்தார். இதனால் அவரைத் தேடி பெரும் இலக்கிய அறிஞர்கள் படைப்பாளர்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர்.திருமுருக கிருபானந்த வாரியார் நீதியரசர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் அடிக்கடி வருவார்கள். தமிழறிஞர் அறிவொளி அவர்களுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர். திருக்கடவூரில் தேவாரப் பாடசாலை ஒன்றை முத்தையாவின் பாட்டனார் நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததால் மரபிலலக்கிய ஆர்வம் உருவானது. ஒன்பதாம் வகுப்பில் தோற்றிருந்த நிலையில் உறவினர் ஒருவர் பரிசளித்த கவியரசு கண்ணதாசன் கவிதைகள் புத்தகம் அவரை மரபுக்கவிதைகள் எழுதத் தூண்டியது.

மணி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு.க.மீ.வெங்கடேசன் ஊக்குவிக்கவே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பொதுமேடைகளில் பங்கேற்க தொடங்கினார். பள்ளியில் நடைபெறும் கம்பன் விழா சிலப்பதிகார விழா போன்ற பெரிய இலக்கிய விழாக்களில் பேசினார். 12-ம் வகுப்பு படிக்கும்போது சிலப்பதிகார விழாவில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் ’கருணை மறவனுக்கு இவர்கள் கையறுநிலை’ என்கிற தலைப்பில் சிலப்பதிகார பாத்திரங்கள் கோவலனுக்கு இரங்கல் கவிதை பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. கோவலனுக்கு சிலம்பு இரங்கல் பாடுவதாக கவிதை பாட வேண்டிய சொ சொ மீ சுந்தரம் வரவில்லை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அத்தலைப்பில் கவிதை எழுதி பாடுமாறு ஆசிரியர் சொல்ல அதில் முதல் கவிதையை அரங்கேற்றினார்.

அந்த ஆசிரியர் தூண்டுதலால் அருணகிரிநாதர் மேல் பருவத்துக்கு ஒரு பாடலாக ஒரு பா பிள்ளைத்தமிழ் எழுதினார். கல்லூரி படிக்கும்போது கோவை தென்சேரி மலை அடிவாரத்திலுள்ள குகை பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு கிருத்திகை தோறும் சொற்பொழிவு நிகழ்த்த செல்வார். அந்த முருகன் மேல் பாடிய பாடல்களையும் சேர்த்து ’வேலின் வெளிச்சத்தில்..’ என்கிற தலைப்பில்1990ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட்டார். மரபுக்கவிதைமேல் உள்ள பற்றினால் மரபின்மைந்தன் என்று புனைபெயர் சூட்டிக்கொண்டார்

காவிய மரபுகள் மேல் ஈடுபாடு கொண்ட முத்தையா சிலப்பதிகாரம் திருமுறைகள் கம்பராமாயணம் திருப்புகழ் அபிராமி அந்தாதி உள்ளிட்ட இலக்கியங்களில் பயிற்சி உடையவர். பாரதி, கண்ணதாசன் என்று தொடர்ந்து நவீன இலக்கியங்கள் வரை வாசிப்பு கொண்டவர். மு. அருணாசலம் முத்தையாவுக்கு உகந்த தமிழாய்வாளர்.

அமைப்புச் செயல்பாடுகள்

வெற்றித்தமிழர் பேரவை

கவிஞர் வைரமுத்து பெயரில் இலக்கியப் பேரவை ஒன்று இயங்கி வந்தது. அதனை அவர் இன்னும் பரந்துபட்ட அமைப்பாக உருவாக்க விரும்பியபோது வெற்றித் தமிழர் பேரவை என்று முத்தையா சொன்ன பெயரை ஏற்றுக்கொண்டார். அந்த அமைப்புக்கு அவர் தலைவராகவும் முத்தையா பொதுச்செயலாளராகவும் உள்ளனர்

ஈஷா யோக மையம்

ஈஷா யோக மையத்தில் 1996-ல் இணைந்த முத்தையா சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்க்கை வரலாறு 1997-ல் எழுதி வெளியிட்டார். ஈஷாவின் முதல் புத்தகம் அது. ஈஷாவில் தன்னார்வத் தொண்டராக சத்குரு உருவாக்கிய கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

விருதுகள்

  • 2008-ல் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றமும்
  • 2007-ல் தமிழ்நாடு அரசு வழங்கிய 2006-ம் ஆண்டுக்கான "கலைமாமணி" விருது
  • 2006-ல் "ரசனை: மாத இதழுக்கு சிறந்த இலக்கிய இதழுக்காக எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் வழங்கிய "கரிசல் கட்டளை" விருது
  • 2020-ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய "சிறந்த மொழிபெயர்ப்பாளர்" விருது
  • 2019-ல் எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராயம் வழங்கிய "மகாகவி பாரதியார்"விருது
  • 2015-ல் சென்னை கம்பன் கழகம் வழங்கிய, கம்பன் அடிப்பொடி நினைவுப்பரிசில்
  • 2015-ல் சென்னை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம் வழங்கிய, "திருமந்திரத் தமிழ்மாமணி" விருது

நூல்கள்

இதுவரை 70 நூல்களை படைத்துள்ளார். இவற்றில் கவிதை நூல்கள் 10. சுயமுன்னேற்ற நூல்கள் 21. மொழிபெயர்ப்பு நூல்கள் 14. வாழ்க்கை வரலாற்று நூல்கள் 6. இலக்கிய நூல்கள் 9 .ஆன்மீக நூல்கள் 10. பதிப்பித்த நூல்கள் 9. தொகுத்தவை 9.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:41 IST